ரசீதை நீட்டிய விஷால்.. பேச முடியாமல் வாயடைத்து போன விஜய்.. அப்படி என்ன ரசீது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஷால் லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகர் விஜயின் தீவிர ரசிகராக இருந்து உள்ளார். அந்த வகையில் சினிமாவில் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த நடிகர் விஷால் அவருடைய கனவெல்லாம் மிகப்பெரிய இயக்குனராக வேண்டும் என்றும். பெரிய இயக்குனராக வந்த பின்பு நடிகை விஜயை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பதுதான் நடிகர் விஷாலின் மிகப்பெரிய கனவாக இருந்துள்ளது.

அந்த வகையில் உதவி இயக்குனராக பல படங்கள் நடித்துக் கொண்டிருந்த நடிகர் விஷால், நடிகர் அர்ஜுன் நடித்த வேதம் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது. இயக்குனர் சங்கரின் அசோசியேட் ஆக இருந்த காந்தி கிருஷ்ணா செல்லமே படத்திற்கான கதையை தயார் செய்து விட்டு அந்த படத்திற்கு நடிகர்கள் கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது வேதம் படத்தில் நடிகர் அர்ஜுனை சந்திக்க வந்த காந்தி கிருஷ்ணா அங்கே உதவிய இயக்குனரான விஷாலை பார்க்கிறார், அப்போது நடிகர் அர்ஜுனிடம் இந்த பையன் யார் என்று கேட்க, அதற்கு அர்ஜுன் தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் பையன் விஷால் ரெட்டி என தெரிவித்துள்ளார். உடனே விசாலை அழைத்து நான் தான் இயக்கும் செல்லமே படத்தில் உங்களுக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு தருகிறேன் என்றுள்ளார்.

அதற்கு விஷால் எனக்கு அதெல்லாம் ஒத்து வராது, எனக்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் ஆசை என தெரிவித்துள்ளார். உடனே அங்கிருந்த அர்ஜுன் இவர் நல்ல இயக்குனர், இவர் சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். முதல்வன், ஜென்டில்மேன் படத்தில் இவர் தான் எனக்கு பல காட்சிகளை விளக்கி கூறுவார். இந்த வாய்ப்பு உனக்கு கிடைக்காது, உடனே பயன்படுத்திக் கொள் என்று விஷாலுக்கு அட்வைஸ் செய்து செல்லமே படத்தில் கமிட்டாக வைத்துள்ளார் நடிகர் அர்ஜுன்.

இதன் பின்பு தொடர்ந்து விஷால் நடித்த முதல் படமே ஹிட் அடித்து அடுத்தடுத்து அவர் ஹீரோவாக தொடர்வதற்கான வாய்ப்பு அமைந்தது. இந்த நிலையில் தான் பெரிய இயக்குனராக வந்து விஜய வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கின்ற நீண்ட நாள் கனவு அது விஷாலுக்கு கனவாகவே இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து பேசிய நடிகர் விஷால், தனக்குள் இன்னும் இயக்குனர் விஷால் இருக்கிறார்.

உங்களுக்கான கதையை தயார் செய்து வைத்துள்ளேன் உங்கள் ரசிகனாக நான் உங்களை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர் விஜய் சரி நண்பா பண்ணலாம் அதுக்கு என்ன என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. நடிகர் விஷால் அன்னை தெரசா முதியோர் இல்லத்திற்கு விஜய் பெயரில் அன்னதானம் வழங்கியதற்கான ரசீதை விஜய்யிடம் காண்பித்து, நான் உங்கள் பெயரில் அன்னதானம் வழங்கி வழங்கியுள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.இதை பார்த்ததும் விஜய் சற்று நேரம் எதுவுமே பேசாமல் வாயடைத்துப் போனவர், நம் மீது நடிகர் விஷால் இவ்வளவு பற்று கொண்டவரா என்று ஷாக் ஆகி உள்ளார்.