லெஜெண்ட் சரவணனிடம் அவமானப்பட்ட நயன்தாரா.. கெத்து காட்டும் லெஜெண்ட்.. இது தான் கர்மா..

0
Follow on Google News

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் நடித்த முதல் படம் லெஜெண்ட், இவர் சினிமாவில் பணம் சம்பாரிக்க படம் எடுக்க வில்லை, தனனுடைய சினிமா ஆசையை நிறைவேற்றி கொள்வதற்கு தான் லெஜெண்ட் என்கிற படத்தில் நடித்தார். பெரும் கோடீஸ்வரரான லெஜெண்ட் தன்னுடைய முதல் படத்தில் அதிக சம்பளம் கொடுத்து இந்த படத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகளை நடிக்க வைத்தனர்..

இசை அமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ்க்கு பெரிய தொகை சம்பளமாக கொடுத்து இந்த படத்திற்கு இசை அமைக்க வைக்கப்பட்டார். இதே போன்று அப்போது முன்னணி நடிகையாக இருந்த நயன்தாராவை லெஜெண்ட் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இருந்தாலும் தொடர்ந்து எப்படியாவது நயன்தாராவை இந்த படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என்பதற்காக, அதிக சம்பளம் தருகின்றோம் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஆனால் நயன்தாரா தரப்பில் எத்தனை கோடி கொடுத்தாலும் லெஜெண்ட் உடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்து விட்டார், இதற்கு காரணம் பவர் ஸ்டார் போன்ற ஒரு நடிகர் லெஜெண்ட் சரவணன், அவருக்கு ஜோடியாக நடித்தால் தன்னுடைய பிரெஸ்டிஜ் என்னாவது என நயன்தாரா லெஜெண்ட் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் லெஜெண்ட் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தியவர்கள் அதிகம் சம்பளம் தருவதாக வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் தொந்தரவு தாங்க முடியமால் இங்கிருந்து வெளியே போங்க என்று அவமானப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களை நயன்தாரா திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன் பின்பு இந்தி நடிகை ஊர்வசி ராவ்டேலா இந்த படத்தில் அதிகம் சம்பளம் பேசி நடிக்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டும் வரை சினிமாவில் மிக உச்சத்தில் இருந்த நயன்தாரா, திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடிப்பதற்கான முடிவில் இருந்தார். ஆனால் ஆனால் நயன்தாரா திருமணத்திற்கு பின்பு அவர் நடிப்பில் வெளியான படம் சரிவர போகவில்லை.

மேலும் திருமணத்திற்கு முன்பு பல படங்களில் கமிட்டாகி அட்வான்ஸ் வாங்கி இருந்த நயன்தாரா அவர்களுக்கு முறையாக கால் சீட் கொடுக்கவில்லை, மேலும் திருமணத்திற்கு பின்பும் கூட அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நயன்தாரா கால் சீட் கொடுக்கவில்லை. இந்நிலையில் நயன்தாரா மார்க்கெட் தலைகீழாக அதாள பள்ளத்தில் விழுந்து உள்ளதால், இனி நயன்தாரா ஓசியில் நடித்தால் கூட படம் பார்ப்பதற்கு ஆளில்லை என்கின்ற முடிவுக்கு வந்த தயாரிப்பாளர்கள்.

நேரடியாக நயன்தாராவிடம் சென்று நீங்கள் கால் சீட்டு கொடுத்து கிழித்தது போதும் நாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி தாருங்கள் என்று திரும்பி வாங்கிக் கொண்டு வருகிறார்கள். இதனால் தற்பொழுது கைவசம் எந்த படமும் இல்லாமல் முடங்கி போய் உள்ள நயன்தாரா, மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தன்னுடைய இமேஜை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அந்த வகையில் அதிக சம்பளத்தில் ஒரு படம் நடித்தால், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் திருமணத்திற்கு பின்பும் நயந்தாரா முன்னணியில் இருக்கிறார் என்கிற இமேஜூடன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகலாம் என்கிற திட்டத்துடன், மேலும் திருமணத்திற்கு பின்பு பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா போன்று தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் நடிகையாக வலம் வர வேண்டும் என திட்டத்துடன் களம் இறங்கிய நயன்தாரா.

லெஜெண்ட் நடிக்கும் அடுத்த படத்தில் தான் கால் சீட் தருவதற்கு தயார், சம்பளம் 10 கோடி என லெஜெட்ன் தரப்பிடம் நயன்தாரா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் ஏற்கனவே முதல் படத்தில் கால் சீட் கேட்டு சென்ற போது, லெஜெண்ட் உடன் ஜோடியாக நடித்திருந்தால், தற்பொழுது இறக்கப்பட்டு இரண்டாவது படத்தில் அதிக சம்பளம் கொடுத்து கமிட் செய்யலாம்.

ஆனால் கால் சீட் கேக்க சென்றவர்களை அவமானபடுத்திவிட்டு தற்பொழுது மார்க்கெட் இல்லை என்பதற்காக சரண்டராகி உள்ள நயன்தாராவுக்கு லெஜெட்ன் நடிக்கும் படத்தில் ஓசியில் நடித்தால் கூட வேண்டாம் என லெஜெண்ட் தரப்பு நயன்தாரா தரப்பிடம் கை விரித்து விட்டதாக கூறப்படுகிறது.