பல்வேறு பிரிவின் கீழ் குண்டர் சட்டத்தில் கைதாகிறாரா பயில்வான்..! புகார் கொடுத்தது யார் தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல சினிமா நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா அந்தரங்க விஷயங்களை வெளியில் கொண்டு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றவர். இவர் பல சினிமா படங்களில் நடித்து இருந்தாலும், கடந்த சில வருடங்களாக, சினிமா கிசு கிசுக்களை யூ ட்யூப் சேனல்களில் பேச தொடங்கிய பின்பு தான் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. ஒரு தரப்பினர் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும்.மற்றொரு தரப்பினர் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பயில்வான் ரங்கநாதன் தற்போது நிகழ்கால கிசு கிசுக்களை மட்டும் பேசி வருகின்றவர் கிடையாது, எம்ஜிஆர் காலத்தில் நடந்த சம்பவங்கள் தொடங்கி தற்போது வரை நடந்த பல கிசு கிசுக்களை வெளிச்சம் போட்டு காண்பிக்க கூடியவர். அந்த வகையில் நடிகை ராதிகா தாயார் நடத்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இவர் வெளியிட்ட தகவல் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் சென்னையில் கடற்கரை சாலையில்,

பயில்வான் ரங்கநாதன் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த நடிகை ராதிகாவுக்கு கடும் வாக்குவாதம் நடைபெற்று மிக கீழ்த்தரமாக திட்டியுள்ளார் நடிகை ராதிகா, இதற்கு நான் பேசியது தவறு என்றால் என் மீது வழக்கு பதிவு செய் என பயில்வான் தெரிவிக்க அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார் ராதிகா என கூறப்படுகிறது. இதே போன்று நடிகை கஸ்தூரி அட்ஜெஸ்ட் செய்து தான் மிஸ் மெட்ராஸ் பட்டம் வாங்கினார் என பயில்வான் பேசினார்.

இதற்கு நடிகை கஸ்தூரி கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார் மேலும் பயில்வான் மீது வழக்கு பதிவு செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார், ஆனால் கஸ்தூரி அப்படி ஏதும் செய்யவில்லை. இப்படி தொடர்ந்து சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து அந்தரங்க விஷயங்களை பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் மீது, இதுவரை யாரும் வழக்கு பதியவில்லை என கூறபடுகிறது. இதனால் பயில்வான் செல்வது அனைத்தும் உண்மையாக இருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சினிமா துறையை சேர்ந்த நடிகைகள் பாலியல் தொந்தரவு குறித்து புகார் தெரிவிப்பது குறித்து சமீபத்தில் பயில்வான் பேசுகையில், ஏதோ ஒரு வெறுப்பின் காரணமாக, பொறாமையின் காரணமாகவே அய்யோயோ…. அவன் என்னை கையை பிடித்து இழுத்து விட்டான். அவன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். அவன் எனக்கு மீ டூ என்று தொந்தரவு கொடுத்தான் என சொல்கிறார்கள். ஒரே வார்த்தை பெரியவர்கள் சொல்வார்கள் கால்கள் இரண்டையும் சேர்த்து வைத்துக் கொண்டாள் தப்பு நடக்குமா.? என பயில்வான் பேசியிருந்தார்.

இதற்கு பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர், பயில்வான் ரங்கநாதன் பேசிய அந்த வீடியோவை குறிப்பிட்டு, பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவிக்கும் உட்கருத்து கொள்ளப்பட்ட சொல் அல்லது சைகை,செய்கை போன்ற செயல்களுக்கு சட்டம் 509ன் கீழ் கைது செய்து,ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம். பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்தும் இவனை குண்டர் சட்டத்தில் தளைப்படுத்தவேண்டும்.

மேலும் 354(a) Ipc, 294 IPC, 4 of Tamil nadu Women harresment act, 67 of Information technology act மற்றும் 354 பிரிவின் கீழ் பாலியல் ரீதியாக பெண்களை அவதூறு செய்தல். இந்த பிரிவுகளின் கீழும் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கலாம் என பயில்வான் ரங்கநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி சமூக வலைத்தள வாயிலாக கவல்த்துறையை வலியுறுத்தியுள்ளார் அந்த முக்கிய அரசியல் தலைவர் என்பது குறிப்பிடதக்கது.

பிச்சைக்காரனுடன் இணைந்து பாலா இப்படி செய்யலாமா.? மனைவி கள்ளகாதலனிடம் லூட்டி அடிக்க இதான் காரணம்..