உனக்கு இதெல்லாம் தெரியாத.? மனைவி லதாவை லெப்ட் ரைட் வாங்கிய ரஜினிகாந்த்..! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்து இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பிரிவதாக அறிவித்ததில் ரஜினிகாந்துக்கு சிறிதும் உடன்பாடு இல்லை இதனால் தனது குடும்ப உறுப்பினர்கள் மீது கடும் கோபத்தில் இருந்தார் ரஜினிகாந்த், தந்தை விருப்பத்துக்காக மீண்டும் தனுஷ் உடன் ஐஸ்வர்யா இணைந்து வாழ விருப்பம் தெரிவித்து அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வியை தழுவியது.

இதன் பின்பு ஒரு வழியாக ரஜினிகாந்தை சமாதானம் செய்தனர் குடும்பத்தினர். இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைவதில் சாத்தியம் இல்லை என்பது உறுதியானது. இதன் பின்பு ஐஸ்வர்யா சினிமாவில் பிசியானார், ம்யூசிக் ஆல்பம் ஒன்றை தயாரித்து அணைத்து மொழிகளிலும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் படம் இயக்க இருக்கிறார்.

படப்பிடிப்புக்கான பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் ஐஸ்வர்யா, சினிமாவில் செம்ம பிசியாக இருந்து வருகின்றார். அவருடைய இரண்டு மகன்களும் பாட்டி லதா உடன் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வருகின்றனர். அவ்வப்போது தனுஷ் தனது இரண்டு மகன்களை நேரில் அழைத்து அவுட்டிங் செல்வது என நேரத்தை செலவு செய்து வருகிறார். பேரன்களின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார் ரஜினிகாந்த்.

அந்த வகையில் சமீபத்தில் யாத்ரா, லிங்கா என இரண்டு பேரன்களையும் ரஜினிகாந்த் பார்க்கும் போதெல்லாம் அம்மா எங்க என்று கேட்டால், அம்மா சினிமாவில் பிசி என்றே பதில் அளித்து வந்துள்ளனர். சமீபத்தில் தந்தை தனுஷ் உடன் யாத்ரா, லிங்கா இருவரும் வெளியில் சென்று வந்த பின்பு அதை தாத்தா ரஜினிகாந்த் அவர்களிடம் பேரன்கள் இருவரும் பகிர்ந்துள்ளனர். அப்பா கூட ரெம்ப ஜாலியாக இருந்தது. இங்க ரெம்ப போர் தாத்தா என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் சமீப காலமாக மகள் ஐஸ்வர்யா சினிமாவில் பிசியாக இருந்து கொண்டு, இரண்டு மகன்களையும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார், மேலும் மகன்கள் இருவரும் தாய் பாசத்துக்கு ஏங்கி வருகின்றனர். இதையெல்லாம் உணர்ந்த ரஜினிகாந்த் கடந்த இரண்டு தினகளுக்கு முன்பு மனைவி லதாவை அழைத்து லெப் ரைட் வாங்கியுள்ளார். பசங்க இரண்டு போரையும் முதலில் கவனிக்க வேண்டும், அதற்கு பிறகு தான் சினிமா மற்றதெல்லாம்.

உனக்கு இதெல்லாம் தெரியாத.? மகள்கள் என்ன செய்தாலும் நீ கண்டு கொள்ள மாட்டியா.? என கடுமையாக தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த். உடனே மகள் ஐஸ்வர்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட லதா வீட்டில் நடந்த விஷயத்தை சொல்ல. கதை டிஸ்கஷனில் இருந்த ஐஸ்வர்யா அதை பாதியிலே விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவர் தனது மகன்களுடன் நேரத்தை செலவு செய்து, இரண்டு மகன்களும் தனக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை ஐஸ்வர்யா வெளியிட பின்னணி ரஜினிகாந்த் கோபம் தான் காரணம் என கூறப்படுகிறது.

பிச்சைக்காரனுடன் இணைந்து பாலா இப்படி செய்யலாமா.? மனைவி கள்ளகாதலனிடம் லூட்டி அடிக்க இதான் காரணம்..