விஜய் உடன் இணைந்த வெங்கட்பிரபு… வெங்கட்பிரபுவை சந்திக்க மறுத்த அஜித்… என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் லியோ படத்தின் எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மிகப் பெரிய அளவில் இருந்து வந்தது. விக்ரம் என்கிற மிக பெரிய வெற்றிக்கு பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம், மேலும் இந்த படத்தில் விஜய் மட்டுமில்லாமல், ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் மற்றும் பல நடிகர் நடிப்பதால் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது லியோ.

லியோ படத்தின் முதல் கட்ட சென்னையில் முடிந்து,அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. அடுத்த சென்னை அருகே ஒரு சண்டை காட்சி என லியோ படத்தின் அடுத்தடுத்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி மிக பெரிய எதிர்பார்ப்பையும், அந்த படத்தின் ஆர்வத்தையும் தூண்டியது. இந்த நிலையில் சமீபத்தில் விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான பின்பு தற்பொழுது லியோ படம் குறித்த எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் குறைந்து விட்டது. வெங்கட் பிரபு – விஜய் இணையும் படம் அரசியல் சார்ந்த படம் என்பதால், அது எந்த மாதிரியான அரசியல் படம், விஜய் அரசியலுக்கு வருவதால் தான் அடுத்து அரசியல் சார்ந்த கதையை தேர்வு செய்தாரா.? என விஜய் புதிய படம் குறித்த விவாதம் மிக பெரிய அளவின் நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் புதிய படம் குறித்து எதாவது ஒரு அப்டேட் கிடைக்கிறதா என வெங்கட் பிரபு செல்லும் இடமெல்லாம் மீடியாக்கள் மைக்கை நீக்கி சுற்றி சுற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள், ஆனால் அவர்களிடம் வாயே திறக்காமல் வெங்கட் பிரபு நைசாக நழுவி சென்று விடுகிறார். இதற்கு ஏனென்றால் தேவையில்லாமல் வாயை விட்டு ஏற்கனவே அஜித்தின் கோபத்திற்கு ஆளானது தான் என கூறப்படுகிறது.

நடிகர் அஜித் புதிய படம் பண்ண, ஒரு இயக்குனரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்றால், அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை சம்பந்த பட்ட இயக்குனர், இது குறித்து வெளியில் எதுவும் பேச கூடாது என அஜித் எதிர்பார்ப்பார். இந்நிலையில் அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற மிக பெரிய ஹிட் படம் கொடுத்தவர் வெங்கட் பிரபு.

குறிப்பாக அஜித்துக்கு ஹிட் படம் கொடுத்த சிறுத்தை சிவா, ஹெச் வினோத் போன்ற இயக்குனர்களுக்கு மீண்டும் மீண்டும் தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுக்க கூடியவர் அஜித், அந்த வரிசையில் அஜித்துக்கு பிடித்தமான இயக்குனராக இருந்து வந்தவர் வெங்கட் பிரபு. இந்நிலையில் அஜித் நடிப்பில் மீண்டும் வெங்கட் பிரபு படம் இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் புதிய படம் குறித்து அஜித்துடன் சந்தித்த புகைபடத்தை உடனே வெங்கட் பிரபு வெளியிட்டது அஜித்துக்கு மிக பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது, அது மட்டுமில்லாமல், அஜித் – விஜய் இருவரை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்க இருப்பதாக அவரது தந்தை கங்கை அமரன் பேட்டி ஒன்றில் தெரிவித்தது, மிக பெரிய விவாத பொருளாக மாறியது, இது அஜித்தை பெரும் கோபம் அடைய செய்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்பு வெங்கட்பிரபு உடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்கிற முடிவை அஜித் கைவிட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அஜித் நடிக்கும் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட பின்பு, அடுத்த வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு தான் சென்றுள்ளது. ஆனால் நடிகர் அஜித் வேண்டவே வேண்டாம் என மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெங்கட் பிரபு மீது அஜித் கோபத்தில் இருந்ததில் காரணமாக கூட விஜய் வெங்கட் பிரபுவை அழைத்து விஜய் வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.