பிரமாண்டமாக திருமணம் செய்து சில மாதங்கள் கூட தாக்கு பிடிக்கல… சங்கரின் மகள் இரண்டாவது திருமணம்..

0
Follow on Google News

இயக்குனர் சங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற மகள்களும், அர்ஜித் என்கிற மகனும் உள்ளனர். இதில் ஷங்கரின் மகள்கள் இருவருமே மருத்துவம் படித்துள்ளனர். இளைய மகள் அதிதி படித்து முடித்ததும் சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். இயக்குனர் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கருக்கு கடந்த 2021ல் தொழிலதிபர் தாமோதரனின் மகனான கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்த திருமணம் நடைபெற்றதால் வெகுவான பேரை அழைத்து செய்ய முடியவில்லை. இருப்பினும் பிரம்மாண்டமாகவே ஐஸ்வர்யாவின் திருமணம் நடைபெற்றது.
கொரோனா காலகட்டத்தில் திருமணம் நடைபெற்றதால், ஊரடங்கு முடிந்தபிறகு மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு ரிசப்ஷன் வைக்க வேண்டும் என நினைத்தார் சங்கர். அதன்படி 2022ல் மே 1 இவர்களுடைய வரவேற்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் காரணம் எதுவும் கூறாமல் இந்த வரவேற்பு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. கிரிக்கெட் வீரரான ரோஹித்துக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்த வேகத்தில் பிரச்சனை ஏற்பட்டது. திருமணமான சில மாதங்களிலேயே ஷங்கரின் மருமகன் ரோஹித், பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கினார். அவர் நடத்தி வரும் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததை அடுத்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இந்த புகாரில் சிக்கியதை அடுத்து கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா. சட்டப்படி திருமணம் ஆகி ஆறு மாதம் கழித்து தான் விவாகரத்து செய்ய முடியும் என்பதால் காத்திருந்த ஐஸ்வர்யாவிடம், குடும்பத்தார் எவ்வளவோ எடுத்துப் பேசியும் ஐஸ்வர்யா தன் கணவரை விவாகரத்து செய்வதில் உறுதியாக இருந்தவர், சத்தமே இல்லாமல் விவாகரத்தும் பெற்று விட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஐஸ்வர்யா தந்தையுடன் அவரது வீட்டில் வசித்து வந்தார், மேலும் கணவரை விட்டு பிரிந்த ஐஸ்வர்யா மருத்துவராகவும் பணிபுரிந்து வந்தார். இதையடுத்து ரோஹித்தை பிரிந்து தன் வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர முடிவு செய்தார் ஷங்கர். இதையடுத்து முன்பின் தெரியாத ஆள் வேண்டாம் என தன்னிடம் உதவியாளராக இருக்கும் தருண் கார்த்திகேயனையே ஐஸ்வர்யாவுக்கு மாப்பிள்ளையாக்க முடிவு செய்து நிச்சயதார்த்தமும் நடத்திவிட்டார்.

நிச்சயதார்த்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டு வாழ்த்தினார் தங்கை அதிதி ஷங்கர். ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநர் மட்டும் அல்ல. அவர் ஒரு பாடலாசிரியர், பாடகரும் கூட. ஷங்கரிடம் உதவியாளராக இருந்துவிட்டு வருபவர்கள் கோலிவுட்டில் அசத்துகிறார்கள். அதனால் தருண் கார்த்திகேயன் இயக்குநராகும்போது அனைவரையும் தன் திறமையை பற்றியே பேச வைப்பார் என்கிற நம்பிக்கையில் உள்ளார் சங்கர்.

ஐஸ்வர்யாவுக்கும், தருண் கார்த்திகேயனுக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என கூறப்படும் நிலையில், ஐஸ்வர்யா, தருணின் நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, முதல் திருமணத்தில் கஷ்டப்பட்டுவிட்டார் ஐஸ்வர்யா, இரண்டாவது திருமணம் அவருக்கு சந்தோஷத்தை கொடுக்கட்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர், நீங்களும் இவர்களே வாழ்தலாமே..