ரஜினியை தரக்குறைவாக பேசிய வடிவேலு… கோபத்தில் வடிவேலுவை தனுஷ் என்ன செய்துள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் கொண்டாட கூடிய ஒரு நடிகராக இருந்து வந்தாரோ, அதற்கு எதிர் மாறாக இன்று மக்கள் வெறுக்க கூடிய நடிகர்களில் முதல் இடத்தில் இருக்க கூடியவர் வடிவேலு தான், அதற்கு காரணம் வடிவேலுவின் தலைக்கனம் என்பது பல இடங்களில் நிரூபணமாகியுள்ளது. தொடர்ந்து வடிவேலு பற்றி நாளுக்கு நாள் சினிமா துறையை சேர்ந்தவர்கள் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள்.

ஒரு முறை வடிவேலு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார், அப்போது ஒரு சிறுவன் வடிவேலுவிடம் சென்று சார் நான் உங்க பேன், எனக்கு ஒரு ஆட்டோ கிராப் போடுங்க என்று கேட்க அதற்கு உன்ன எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என வடிவேலு கேட்க, சார் நான் நடிகர் சரத்குமார் மகன், எங்க அப்பா கூட நீங்க நடித்த படங்கள் அனைத்தும் எனக்கு ரெம்ப பிடிக்கும், எங்க அப்பா கூட நீங்க பன்ற காமெடி சூப்பர் சார் என சரத்குமார் மகன் தெரிவிக்க.

அதற்கு வடிவேலு, உங்க அப்பா படம் இப்ப ஓடுவதற்கு காரணமே நான் தான், அவர் கூட நான் இணைந்து நடிப்பதால் தான் மக்கள் அவர் படத்தை பார்க்கிறார்கள், அந்த வகையில் நான் தான் இப்ப உங்க அப்பாவுக்கு சினிமாவில் வாழ்வு கொடுத்து வருகிறேன் என வடிவேலு பேசியதும், சரத்குமார் மகனின் முகம் வாடியுள்ளது, ஒடனே அதை அவங்க அம்மாவிடம் அந்த சிறுவன் தெரிவிக்க, விமானத்தில் சண்டையிட்டால் சரியாக இருக்காது என பொறுமையாக இருந்துள்ளார் ராதிகா.

நாட்டாமை, சூர்யவம்சம் என ஒரு காலகட்டத்தில் மெகா ஹிட் படங்களை கொடுத்த சரத்குமார் அடைந்த உயரத்தை வடிவேலுவால் நினைந்து கூட பார்க்க முடியாத போது, ஒரு சின்ன பையன் கிட்ட என்ன பேசவேண்டும் என்று கூட தெரியாமல், அவருடைய அப்பாவை மட்டம் தட்டும் வகையில் தலைக்கனத்தில் பேசிய வடிவேல், இதே போன்று நடிகர் தனுஷிடமும் நடந்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படத்தில் விவேக் நடித்த காமெடி காட்சிகள் மிக பெரிய அளவில் இன்றும் பேசப்பட்டு வருகிறது, அந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், அந்த படத்தில் இடப்பெற்ற விவேக்கின் காமெடி காட்சிகள் தான், மேலும் விவேக் – தனுஷ் இருவரின் காம்பினேஷனில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் வேறு லெவலில் ரசிகர்கள் இன்றளவு கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால் இந்த படத்தில் விவேக் பதில் முதலில் கமிட்டாகி இருந்தது வடிவேல் தான், படப்பிடிப்பில் தனுஷ் – வடிவேலு இடம்பெறும் காட்சிகளும் படமாக்கப்பட்டு வந்தது, இந்நிலையில் படப்பிடிப்பில் தனுஷ் – வடிவேலு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, உங்க மாமனார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படம் ஹிட் அடித்ததற்கு காரணமே நான் அந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்ததால் தான் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.

மேலும் நான் மட்டும் சந்திரமுகி படத்தில் இல்லை என்றால் அந்த படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்று இருக்காது, என உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரஜினிகாந்த் படத்தில் இவர் நடித்ததால் தான் வெற்றி பெற்றது என்கிற தோரணையில் வடிவேலு பேசியது, அதுவும் தன்னுடைய மாமனாரை இழிவு படுத்தும் விதத்தில் தன்னிடம் நேரடியாக வடிவேலு பேசியது கடும் கோபத்தை தனுஷ்க்கு ஏற்படுத்தியுள்ளது.

உடனே படத்தின் இயக்குனரை அழைத்து, இந்த படத்தில் வடிவேல் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என தனுஷ் பிடிவாதம் பிடிக்க, அதன் பின்பு தான் வடிவேலுக்கு பதில் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் விவேக் என்ட்ரி கொடுத்துள்ளார் என்கிற தகவலை சமீபத்தில் சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் வெளிப்படுத்தி இருந்தார்.