அஜித்தை வெளியேற்ற மணிரத்தினம் – சுகாஷினி கொடுத்த நெருக்கடி….

0
Follow on Google News

எம்ஜிஆர் சிவாஜியில் தொடங்கி ரஜினி கமல் என தொடரும் ரசிகர்களின் சண்டை வரிசையில் மூன்றாவது தலைமுறையில் விஜய் – அஜித் என உருவெடுத்துள்ளது. அஜித் – விஜய் ரசிகர்களுக்கு இடையிலான மோதல் தான் இருவரையும் மிக பெரிய உச்சத்தில் அமரவைத்துள்ளது. ஆனால் என்ன தான் விஜய் – அஜித் ரசிங்கர்களுக்கு இடையில் சண்டை இருந்தாலும், விஜய் – அஜித் இருவருக்கும் இடையில் எந்த ஒரு சண்டையும் இல்லை என வெளிப்படையாக காட்டி கொள்ள வில்லை என்றாலும்.

சினிமா காட்சிகள் மூலம், அவரவர் படத்தில் மாற்றி மாற்றி வசனங்கள் மூலம் மறைமுகமாக சண்டையிட்டு வருவது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. மேலும் யாருக்கு அதிக வசூல் அதிகம் என்று பார்த்து விடுவோம், என ஒரே நாளில் இருவரின் படத்தை ரிலீஸ் செய்து, அதன் மூலம் ரசிகர்களுக்கு இடையிலான மோதல், அதை தாண்டி வசூல் என அஜித் – விஜய் இருவருமே மாஸ் காட்டி தான் வருகிறார்கள்.

தற்பொழுது இவர்கள் இருவரும் போட்டியாளராக இருந்தாலும் ஆரம்ப காலங்களில் இருவரும் மிகவும் நட்போடு இருந்து வந்துள்ளார்கள். அஜித், விஜய் இருவரும் இணைந்து ந ராஜாவின் பார்வையிலே என்கிற படத்திலும் நடித்துள்ளார்கள்.ஆனால் இந்த படம் மிகவும் சுமாரான படமாகவே இருந்ததால், அஜித் விஜய் இருவரும் இணைந்து அப்படி ஒரு படம் நடித்ததே பலருக்கும் தெரியாது.

ஆரம்ப கால கட்டத்தில் அஜித் – விஜய் இருவரும் பிரபலமாகாத நிலையில் இணைந்து நடித்தனர், ஆனால் காலங்கள் மாறி இருவரும் பெரிய டாப் ஸ்டார் ஆன பிறகு, இருவருக்கும் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் தான் நேருக்கு நேர். நேருக்கு நேர் திரைப்படத்தில் ஆரம்பத்தில் விஜய் மற்றும் அஜித் நடிப்பதாக இருந்தது. அஜித் நடிக்கும் காட்சிகள் சுமார் 10 நாள்கள் படமாக்க பட்டது.

அஜித்தும் நேருக்கு நேர் படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஷூட்டிங் எல்லாம் நடந்து கொண்டிருந்த அந்த சமயத்தில் தான் அவர் காதல்கோட்டை என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்த அஜித் மிகவும் பிசியாக பல படங்களில் ஒரே நேரத்தில் கமிட்டாகி நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து அஜித்துக்கும் அந்த படத்தின் இயக்குனர் வசந்த் க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி நேருக்கு நேர் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்தது. அந்த நிறுவனத்தை சேர்ந்த மணிரத்னம் – சுகாசினியும் சுகாசினி இருவரும் நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித்தை வெளியேற்றி விட்டு வேறு ஒரு நடிகரை போடுங்க என இயக்குனருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளார்கள், இப்படி கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் 10 நேருக்கு நேர் படத்தில் நடித்தும், அந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் அஜித்.

அஜித் வெளியேறிய காரணத்தினால் அப்படத்தில் பிரசாந்தை நடிக்க வைக்க முடிவு செய்தனர். ஆனால் அவர் ஜீன்ஸ் படத்தில் பிஸியாக இருந்து விட்டார். அதன் பிறகு பிரபுதேவாவை நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஆனால் பிரபுதேவா இன்னொரு ஹீரோ ரிஜக்ட் செய்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு தான் சிவக்குமாரின் மகன் சூர்யாவை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர்.

ஆனால் சிவக்குமார் மகன் சினிமாவில் நடிக்க அனுமதிக்கவில்லை.ஒரு கட்டத்தில் இயக்குனர் வசந்த், சிவகுமாரை கன்வின்ஸ் செய்து நேருக்கு நேர் படத்தில் சூர்யாவை நடிக்க வைத்தார். அந்த சமயம் விஜய் ஒரு டாப் ஸ்டார், சூர்யா அப்பொழுதுதான் அறிமுகம். எனவே விஜய் ஏற்றுக் கொள்வாரா என்று அனைவரும் பயந்தனர். ஆனால் விஜய்யோ சிறிதும் யோசிக்காமல் நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று தெரிவித்து விட்டார்.