விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த ஷாக்… அப்ப விக்னேஷ் சிவன் நிலைமை…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக பிஸி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் என்கின்ற அடை மொழியுடன் டாப் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா. அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தின் மூலம் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். பொதுவாகவே தமிழ் சினிமாவில் இருந்து செல்லும் நடிகர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு பாலிவுட் சினிமாவில் இருக்காது.

ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருந்து சென்ற ஸ்ரீதேவி, ஹேமா மாலினி, ஜெயபிரதா போன்ற பல நடிகைகள் 40 வயதை நெருங்கும் சமயத்தில், தென்னிந்திய சினிமாவில் ஓய்வு பெரும் நிலையில் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து மிகப் பெரிய வெற்றியை பெற்று பாலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்தவர்கள்.

இந்நிலையில் பொதுவாக தமிழ் சினிமா போன்று பாலிவுட் சினிமாக்களில் நேரடியாக இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளிடம் நடிக்க வைப்பதற்கு பேச மாட்டார்கள், இதற்கு சில ஏஜென்சி நிறுவனங்கள் இருக்கும். அந்த வகையில் ஜவான் படத்தில் முலம் பாலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்த நயன்தாராவிடம், மும்பையில் உள்ள பிரபல சினிமா ஏஜென்சி ஒன்று தொடர்பு கொண்டு அடுத்தடுத்து உங்களுக்கு சல்மான்கான், ஷாருக்கான் , அமீர்கான் போன்ற பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்தி கொடுகிறோம்.

அதனால் நீங்கள் தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கலாம் என பேச்சு வார்த்தையை ஜவான் படத்தில் நயன்தாரா கமிட்டான போதே நடத்தியுள்ளது அந்த ஏஜெண்சி நிறுவனம். இதற்கு முக்கிய காரணம் நயன்தாரா கமிட்டான ஜவான் படம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும் என்கின்ற முன்கூட்டியே அந்த ஏஜென்சி கணித்துள்ளது என்கின்றனர்.

இந்த நிலையில் ஜவான் படம்தில் நடிக்க ஒப்பந்தமான நயன்தாரா ஆரம்பகட்டத்திலேயே அடுத்தடுத்து ஹிந்தியில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று தருவதற்கு ஏஜென்சி நிறுவனம் பேசியதை தொடர்ந்த, சுமார் ஏழு வருடங்களாக நயன்தாராவை காதலித்து வந்து விக்னேஷ் சிவனுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நயன்தாரா பாலிவுட் சினிமாவில் பிஸியாகிவிட்டால் பல பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க தொடங்கிவிட்டால். அப்போ நம்முடைய நிலைமை என்ன ஆவது என்கிற அச்சம் விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்ட, எங்கே ஹிந்தியில் பிசி நடிகையாக நயன்தாரா வந்துவிட்டால், திருமணத்தை ஒரு 5 வருடம் அல்லது அதற்கு மேலும் தள்ளி வைத்து விட்டால் அதற்குள் இருவருக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்ற அச்சம் தான் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் உடனே திருமணம் செய்ய வேண்டும் என்கின்ற நெருக்கடியை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட பின்பு இனி நயன்தாரா எங்க வேண்டுமானாலும் போய் நடிக்கட்டும் என்கின்ற நயன்தாரா விருப்பத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் பச்சைக் கொடி காட்டிவிட்டார் விக்னேஷ் சிவன். இதனை தொடர்ந்து நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ள ஜவான் படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில்.

இந்தப் படத்தில் நயன்தாராவின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பாலிவுட் சினிமாவில் பேசும் பட்சத்தில் அடுத்தடுத்து அங்கே முன்னணி இருக்கும் பாலிவுட் நடிகர்கள் நயன்தாராவை தங்களுடைய படத்தில் கமிட் செய்து, அடுத்து தொடர்ந்து பாலிவுட்டில் பிசி நடிகையாக நயன்தாரா வலம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

குறிப்பாக தென்னிந்தியா சினிமாவில் இருந்து சென்ற ஹேமா மாலினி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா போன்ற நடிகைகள் எல்லாம் தென்னிந்திய சினிமாவில் நடித்து ஓய்வு பெரும் நிலையில்தான் பாலிவுட் சினிமாவுக்கு சென்று அங்கே மிகப் பெரிய வெற்றியைப் பெற்று பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தார்கள். அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் நயன்தாரா பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளது. அவர் பாலிவுட்டில் மிகப்பெரிய உச்சத்திற்கு சென்று இனி தமிழ் சினிமா பக்கம் வருவதற்கான வாய்ப்பு குறைவு தான் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.