அழிவின் விழிப்பில் பாலா… திட்டமிட்டு பழிவாங்கும் சூர்யா… ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பதா.?

0
Follow on Google News

நடிகர் விக்ரம் மற்றும் சூர்யா என இரு பெரும் நடிகரை தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டியவர் இயக்குனர் பாலா. மிகக் குறைந்த செலவில் தனது படைப்புகளால் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் பாலா. நடிகர்கள் சூர்யா மற்றும் விக்ரம் இருவரும் பல படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கத்தில் இவர்கள் நடித்த பின்பு தான் மக்கள் மத்தியில் ஒரு நடிகராக அடையாளம் காட்டப்பட்டனர்.

தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து, பல நடிகர்களுக்கு சினிமாவில் வாழ்க்கை அமைத்து கொடுத்து வந்த இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது. ஒரு பக்கம் சினிமாவில் தொடர் தோல்வியை சந்தித்து வந்த பாலா, மறுபக்கம் குடும்பத்தில் அவருடைய மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இப்படி ஒரே நேரத்தில் சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் தோல்வியை தழுவி இருந்த பாலா. இனி தன்னுடைய முழு கவனத்தையும் சினிமா பக்கம் திருப்ப முடிவு செய்து, நடிகர் சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தை இயக்க தொடங்கினார். இந்த படத்தை நடிகர் சூர்யா சொந்தமாக தயாரித்து வருகிறார்.தன்னுடைய முதல் படம் சேது படப்பிடிப்பில் எப்படி பாலா இருந்தாரோ அதே போன்று தான் வணங்கான் படப்பிடிப்பிலும் இருக்கிறார்.

பாலா நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் நந்தா படத்தில் இருந்த சூர்யா தற்பொழுது இல்லை. முன்னணி நடிகராக உயர்த்துள்ளதால், பாலாவுடன் சூர்யாவுக்கு ஈகோ ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வணங்கான் படப்பிடிப்பின் போது அடிக்கடி சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் உரசல் இருந்து வந்துள்ளது. மேலும் வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் சற்று கூடுதல் ஈகோ சூர்யாவுக்கு இருந்து வந்துள்ளது.

ஆனால் நந்தா மற்றும் பிதாமகன் படத்தின் போது சூர்யாவை எப்படி பாலா கையாண்டு வந்தாரோ, அதே போன்று வணங்கான் படத்தின் படப்பிடிப்பின் போதும் சூர்யாவை பாலா கையாண்டு வந்துள்ளார். இது வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் சூர்யாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் சூர்யா – பாலா இருவருக்கும் ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை அடைந்ததை தொடர்ந்து படப்பிடிப்பு பாதியிலே வெளியேறினார் சூர்யா.

இதனால் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நின்றது. இந்நிலையில் வணங்கான் படம் கைவிடப்பட்டால் தன்னுடைய சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் என்பதால், சூர்யாவிடம் சமரசம் செய்து கொள்ள முன் வந்த பாலா, வணங்கான் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாரானார், ஆனால் சூர்யா படத்தின் முழு கதையை தயார் செய்து வாருங்கள், பின்பு படப்பிடிப்பை தொடங்கலாம் என்று தெரிவித்துவிட்டார்.

ஒவ்வொரு முறையும் பாலா கதையை சூர்யாவிடம் தெரிவிக்க, கதையில் தொடர்ந்து மாற்றங்கள் வேண்டும் என சூர்யா வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் வணங்கான் படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியமால் திணறி வருகிறார் பாலா. ஒரு கட்டடத்தில் கதையை மெதுவாக தயார் செய்யுங்கள் என தெரிவித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க சென்றுவிட்டார் சூர்யா.

சூர்யாவை தொடர்ந்து வணங்கான் படத்தில் பணியாற்றிய பலரும் வேறு படங்களில் கமிட்டாகி பிசியாகியுள்ளனர். இந்த நிலையில் பாலா வணங்கான் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவிடம் கடுமையாக நடந்து கொண்டதை மனதில் வைத்து திட்டமிட்டு பாலாவை பழிவாங்கும் நோக்கில் தான் சூர்யா வணங்கான் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கமால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டால் கூட பரவாயில்லை என்று இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வணங்கான் படம் பாதியிலே கைவிடப்படும் சூழல் உருவாகியுள்ளதால், தன்னுடைய சினிமா வாழ்க்கை அழிவின் விளிம்பில் இருப்பதை நினைத்து கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ள இயக்குனர் பாலா, தற்பொழுது அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. நந்தா படத்தின் மூலம் சூர்யாவுக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்த பாலாவின் சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார் சூர்யா என்று கூறப்படுவது குறிப்பிடதக்கது.