குழந்தைகளுடன் மும்பையில் குடியேறிய ஜோதிகா.. தமிழ் சினிமாவுக்கு குட் பை.. என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

மும்பையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஜோதிகா, அவருடைய அக்கா நக்மா தயவில் தமிழ் சினிமாவில் அஜித் ஜோடியாக வாலி படத்தில் அறிமுகமானார். மிகக் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வாழ வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். சூர்யா – ஜோதிகா இருவரும் நீண்ட வருடமாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஜோதிகாவை திருமணம் செய்வதற்கு முன்பு தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில் செய்து வந்த சூர்யா. திருமணத்திற்கு பின்பு மனைவி ஆலோசனைப்படி கோடி கணக்கில் மும்பையில் பிரபல நிறுவனத்தில் முதலீடு செய்ய தொடங்கினார். இதுவரை சுமார் 300 கோடி வரை மும்பையில் முதலீடு செய்துள்ள சூர்யா – ஜோதிகா தம்பதியினர் சினிமாவில் சம்பாரிப்பதை விட, தொழில் ரீதியாக பெரும் வருமானத்தை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சமீப காலமாக அடிக்கடி குடும்பத்துடன் மும்பை சென்று தங்கி வந்த சூர்யா, மனைவி ஆலோசனைபடி தன்னுடைய இரண்டு குழந்தைகளின் பள்ளியை சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றிய சூர்யா நிரந்தரமாக மும்பையில் குடியேறியுள்ளார். இனி சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் போது மட்டும் தமிழகம் வரும் சூர்யா, பெரும்பாலும் குடும்பத்துடன் மும்பையில் தான் இருக்க உள்ளார்.

இந்நிலையில் இனி தமிழ் சினிமாவில் நடிக்க போவது இல்லை என முடிவு செய்துள்ள ஜோதிகா. தமிழ் சினிமாவிற்கும் குட் பாய் சொல்லிவிட்டு இதற்கு முன்பு கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் வெளியாகியுள்ளார். அதே நேரத்தில் மலையாள படங்களில் நடிக்க ஜோதிகா கமிட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.