இரண்டு மகன்களை அம்போ என விட்டுவிட்ட நட்சத்திர ஓட்டலில் ஐஸ்வர்யா… அங்கே என்ன செய்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஜனவரி மாதம் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து, இருவரும் ஒருமனதாக பிரிவதாக அறிவித்தனர். பிரிந்த தம்பதியினர் இரண்டு குழந்தைகள் நலன் கருதி, மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சியில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் விரைவில் இவர்கள் அதிகாரப்பூர்வமாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் நடந்த தனுஷ் பிறந்தநாள் அடுத்து வந்த தீபாவளி பண்டிகை என அனைத்து கொண்டாட்டத்திலும் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் தனித்தனியாக தான் கொண்டாடி வருகின்றனர். இந்த தம்பதியினர் பிரிவதற்கு முன்பு சுமார் 150 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக போயஸ் கார்டனில் வீடு கட்டி வந்தனர்.

இவர்கள் பிரிந்த பின்பு, அந்த வீட்டின் கட்டிட வேலைகள் அனைத்தும் தனுஷ் தான் கவனித்து வருகிறார், தற்பொழுது கட்டிட வேலைகள் முடிந்து இன்டெரியர் வேலை நடைபெற்று வருவதால், தனுஷ் நேரடியா வேலை நடக்கும் இடத்திற்கே சென்று, அங்கே எது மாதிரியாக இருக்க வேண்டும், எந்த பொருளை பயன்படுத்த வேண்டும் என, அவரே தேர்வு செய்து வருவதால் அவருடைய நேரடி பார்வையில் போயஸ் கார்டன் வீட்டின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தை மாதம் போயஸ் கார்டன் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் நடத்த உள்ள தனுஷ், இந்த வீட்டில் மனைவி ஐஸ்வர்யா உடன் இணைந்து குடியேறுவாரா அல்லது தனியாக குடியேறுவாரா என்கிற குழப்பம் நீடித்து வருகிறது. கணவர் தனுஷை விட்டு பிரிந்த பின்பு முழுக்க முழுக்க சினிமாவில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும் ஐஸ்வர்யா, இயக்குனராக புதிய பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

லைக்கா நிறுவனத்திடம் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ரஜினிகாந்த், மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை மகள் ஐஸ்வர்யா இயக்க இருக்கிறார். நடிகர் அதர்வா நடிப்பில் ஐஸ்வர்யா இயக்க இருக்கும் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்தை வைத்து தான் முழு படத்தையும் இயக்க ஐஸ்வர்யா முயற்சி செய்து வந்தார்.

ஆனால் அதற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவிக்கவில்லை, இருந்தும் ஐஸ்வர்யாவின் பிடிவாத காரணமாக மகள் இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ரஜினிகாந்த் ஓகே சொல்லியுளளார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் மற்றும் மற்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஐஸ்வர்யா, தற்பொழுது ரஜினிகாந்துக்கு சொந்தமான நட்சதிர ஓட்டல் ஒன்றில் நிரந்தரமாக தங்கி விட்டார் என்றும், வீட்டிற்கு செல்வதே இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு மகன்களையும் அம்போ என்று விட்டுவிட்டு நட்சத்திர ஓட்டலில் ஐஸ்வர்யா தாங்கி இருப்பதால், தற்பொழுது இரண்டு மகன்களும் நிரந்தரமாக தந்தை தனுஷ் வீட்டில் தங்கியுள்ளார்கள். தீபாவளி பண்டிகை மற்றும் நேரம் கிடைக்கும் பொழுது வீட்டிற்கு வரும் ஐஸ்வர்யா, அப்போது மட்டும் மகன்களை தன்னுடன் அழைத்த அவர்களுடன் பாசமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் மிக பெரிய இயக்குனர் கூட இது போன்று தங்களை பிசியாக கட்டிக்கொள்ள மாட்டார்கள், ஆனால் தன்னுடைய மகன்கள் இருவரையும் தாய் பாசத்திற்கு ஏங்க விட்டுவிட்டு, அப்படி என்ன இவர் சினிமாவில் சாதிக்க போகிறார் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது. இருந்தும் ஐஸ்வர்யாவின் இரண்டு குழந்தைகளுக்கு இது புதிது இல்லை என்பதால், தந்தை தனுஷ் உடன் மகிழ்ச்சியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.