என் மனைவி கொடுக்காத அந்த சுகத்தை இவர் கொடுக்கிறார்.. நடிகர் பப்லு பிரிதிவிராஜ் ஓப்பன் டாக்..!

0
Follow on Google News

சீரியல் நடிகர் பப்லு பிரிதிவிராஜ் குழந்தை நட்சதிரமாக சினிமாவில் அறிமுகமானார். தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் பிரிதிவிராஜ், தன்னை விட 24 வயது குறைவான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, 56 வயதுடைய பிரிதிவிராஜ் தன்னுடைய புதிய மனைவியுடன் தொடர்ந்து பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அப்பொழுது உங்களுடைய முன்னால் மனைவி இதைப்பற்றி என்ன நினைப்பார்கள், அப்படியானால் இவ்வளவு நாட்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று நெறியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த பப்லு, எனக்கு என்ன தேவைய, எனக்கு என்னெல்லாம் புதியதாக வந்துள்ள இவர்கள் கொடுக்கிறார்களோ, எடுத்துக்காட்டாக மரியாதை, நிறைய காதல் மேலும் உடல் சுகத்தை கொடுக்கிறார்.

இதெல்லாம் முன்னாள் மனைவி எனக்கு கொடுக்கவில்லை,என்னை முன்னாள் மனைவி சரியாக கையாண்டிருந்தால், என்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் தெரியும் நான் என்றைக்கும் என்னுடைய மனைவிக்கு துரோகம் செய்தது கிடையாது, நான் என் முன்னாள் மனைவியிடம் பிரிந்து சென்ற பின்பு தான் என்னுடைய மனதை தளரவிட்டேன். என் வீட்டில் கிடைக்காத சுகம், வீட்டில் கிடைக்காத சாப்பாடு வெளியில் சாப்பிட ஆரம்பித்தேன்.

அதனால் நிச்சயமாக இதை என்னுடைய முன்னால் மனைவி நல்லவிதமாக எடுத்துக் கொள்ளப் போவது கிடையாது. நான் தற்பொழுது செய்து கொண்டிருப்பது அனைத்தும் தவறு என்று தான் அவர் எண்ணத்தில் எண்ணிக் கொண்டிருப்பார். இதுபோன்று செய்வதால் நான் என்னுடைய முன்னாள் மனைவியை அவமதிக்கிறேன் என்று தான் அவர்கள் எடுத்துக் கொள்வார்.

என்னுடைய முன்னாள் மனைவி நன்றாக பார்த்து இருந்தால், கணவர் இப்படி சென்றிருக்க மாட்டார் என்று அவர் நிச்சயம் நினைக்க மாட்டார். நான் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு காரணம் என்னுடைய மகன் முன்பாகவே நாங்கள் சண்டை போட ஆரம்பித்து விட்டோம். அதனால் நான் வீட்டிலேயே தொடர்ந்து இருந்தால் சண்டையை அதிகமாகும் என்பதற்காக நான் விலகி சென்றேன்.

நான் விலகி தூரமாக சென்றால் கூட எந்த விதத்திலும் என்னுடைய குடும்பத்தையும் என்னுடைய பையனையும் நான் புறக்கணிக்கவில்லை. என்றைக்குமே என்னுடைய வாழ்க்கையில் என் பையன் இருப்பான். ரொம்ப நாட்கள் நான் தனிமையில் அழுதுள்ளேன். கடவுள் அனைவருக்கும் அள்ளி கொடுத்த சந்தோசத்தை எனக்கு கிள்ளி கொடுத்துள்ளார் என்று பிரிதிவிராஜ் தெரிவித்துள்ளார்.