மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சித்தார்த் : வறுத்தெடுக்கும் இணைத்தள வாசிகள்….

0
Follow on Google News

நடிகை சமந்தா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகநெட்டிசன்கள். இது குறித்து நடிகர் சித்தார்த் தன் மீது வேண்டுமென்றே வதந்திகள் பரப்பப்படுகிறது கூறியுள்ளார். சமீபகாலமாகவே பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளமான டுவிட்டரில் சமூக கருத்துகளை வெளியிட்டு ஆர்வம் காட்டி வந்தார். இதில் மத்திய அரசுக்கு எதிராக சில விஷயங்களில் கருத்துக்கள் கூறி வந்தார் நடிகர் சித்தார்த்.

பட வாய்ப்புகள் இன்றி விளம்பரம் வாய்ப்புகளில் நடித்துவந்த சித்தார்த். தேவையற்ற அரசு விஷயங்களில் தலையிட்டு சர்ச்சை கருத்துக்களையும் பகிர்ந்து வந்தார். இவர் ஒருமுறை உபி முதலமைச்சரை கன்னத்தில் அறைய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார் ஒரு கருத்தும் பெருமளவில் சர்ச்சையை கிளப்பியது. இவர் பெரும்பாலும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்தாள் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எண்ணிய இவருக்கு கடைசியில் விளம்பர வாய்ப்புகள் கூட கிடைக்காமல் டுவிட்டரில் தலைமறைவானார்.

தற்போது நடிகை சமந்தா காதல் கணவர் நாகசைதன்யாவைத் பிரிந்ததாக ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து நடிகர் சித்தார்த் டுவிட்டரில்ஏமாற்றுவார்கள் முன்னேறுவது இல்லை என்று தனது ஆசிரியர் குறிப்பிட்டதாக ஒரு பதிவை பதிவு செய்து இருந்தார். தற்போது அந்த பதிவு நடிகை சமந்தாவை குறிப்பிட்டு சொல்வது போன்று இருப்பதாக இணையதள வசதிகள் சித்தார்த்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகர் சித்தார்த் கூறுகையில் சமூக ஊடகங்கள் வதந்தி பரப்புவதாக கூறியுள்ளார்.

error: Content is protected !!