பாஜக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு சிசிடிவி கேமராவை தூக்கி சென்ற திமுக எம்பி..! உயிருக்கு ஆபத்தான நிலையில் பாஜக நிர்வாகி..

0
Follow on Google News

திருநெல்வேலி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பாஜக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தொடர்பாக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுளளார், மேலும் அவர் தெரிவித்துளதாவது. திருநெல்வேலி திமுக எம் பி ஞானதிரவியம் நேற்று இரவு வள்ளியூரை அடுத்த காவல்கிணறு அருகே ஏ வி எம் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்த, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி, ஆவரைகுளம் பாஸ்கரன் அவர்களை அவரே நேரடியாகச் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

அவரை அடித்து நொறுக்கியது மட்டுமின்றி, அங்கிருக்கிற கேமராக்களையும் அடித்து நொறுக்கி
சிசிடிவி கேமராவை எடுத்துச் சென்றுவிட்டார்கள். இதை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிற நிலையில், அத்துடன் விடாமல் கடைக்கு வெளியே காரில் உட்கார்ந்து கொண்டு பாஸ்கரன் வெளியே வெளியே வரும்வரை மேலும் தாக்குதல் நடத்த தயாராக இருந்திருக்கிறார். பாஸ்கரன் வெளியே சென்றால் உயிருக்கு ஆபத்து என்று கடையில் காத்திருந்து, பின்னர் மருத்துவமனைக்கு செல்ல பயந்து நேரடியாக தன் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

நெல்லைக்கு செல்லும் வழியில் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் அவர் மருத்துவமனைக்கு உடனடியாக செல்லவில்லை. இன்று மாவட்ட தலைவர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் அவரை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி ஹை கிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள். திமுக எம்பி களின் அராஜகம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது கடலூர் திமுக எம் பி ரமேஷ் என்பவர் மீது இப்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இப்போது திருநெல்வேலி எம்பி ஞானதிரவியம் ஒருவர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் தொடுத்திருக்கிறார். இவர் மீதும் கடுமையான வழக்கு பதிவு செய்து காவல்துறை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். அரசியல் அதிகாரம் என்பது நிலையில்லாதது பிரியாணி கடை முதல் மக்கடை வரை திமுகவின் அராஜகத்தை ரவுடிசத்தை தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் வன்முறை கலாச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். ஆளுங்கட்சியாக
வந்தபிறகும் கூட அதே பழக்கத்தை தான் தொடர்கிறார்கள். ஆட்சி மாறினாலும் காட்சி மாறினாலும்
இவர்களுடைய வன்முறை கலாச்சாரம் மட்டும் மாறவில்லை. இப்போது திமுசு நாடாளுமன்ற உறுப்பினர்களே இதுபோன்ற வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுப்பது தமிழகத்தின் அமைதிக்கு மிக மிக ஆபத்தை விளைவிக்கும் என்பது உறுதி.

இதுபோன்ற நேரத்தில் அரசியல் பாரபட்சம் பார்க்காமல் காவல்துறை தனது கடமையை சரியாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்க வேண்டியதிருக்கும், என்பதை காவல்துறைக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார், இந்நிலையில் இன்று அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்த தம்பி பாஸ்கரை திமுகவினரின் அழுத்தம் காரணமாக அவசர அவசரமாக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்வதில் குறியாக இருப்பதை அறிந்து மருத்துவமனைக்கு நேரில் சென்று நிர்வாக அதிகாரிகளிடம், எக்காரணம் கொண்டும் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரை உரிய சிகிச்சை அளிக்காமல் டிஸ்சார்ஜ் செய்யக் கூடாது. மீறி டிஸ்சார்ஜ் செய்தால் நான் இங்கேயே அமர்ந்து தர்ணா செய்வேன் என முன்னால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

அவர் எச்சரிக்கையத் தொடர்ந்து திமுக எம்பி ஞான திரவியம் மற்றும் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான பாஸ்கருக்கு தற்போது சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல தாக்குதலில் ஈடுப்பட்டதாகச் சொல்லி சிலர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் திமுகவின் எம்.பி. ஞானதிரவியம் மீது FIR பதிவு செய்யும் வரை இந்த இடத்திலிருந்து நகர மாட்டேன் என போலீசாரிடம் திட்டவட்டமாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவருடன் திருநெல்வேலி மாவட்ட தலைவர் மஹாராஜன் மற்றும் பா.ஜ.கவின் பொறுப்பாளர்கள் உடன் உள்ளனர்.

சிவன் சொத்து குல நாசம், திமுகவை எதிர்த்து துர்கா ஸ்டாலின் தலைமையில் பாஜகவின் அடுத்த ஆர்ப்பாட்டம்.. திருச்சியில் நடத்த பாஜக ஆர்பாட்டத்தில் பேராசிரியர் பேச்சு…