ஒரே பெட்டில்… ஆண்- பெண் இருவரும்… அட.. ச்சீ… எல்லை மீறி போகும் பிக் பாஸ் ஷோ..

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஏராளமான மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசித்து வருவதால், நிகழ்ச்சியின் ஆறு சீசன் முடிந்து இப்ப்போது ஏழாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குவார்.

புதிதாகத் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 7 இரண்டு வீடுகளுடன் வித்தியாசமான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. பிக் பாஸ் என்றாலே சண்டைக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. அப்படித்தான் சீசன்- இலும் போட்டியாளர்கள் சச்சரவுகளை தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக, போட்டியாளர் பிரதீப்பின் நடத்தைகள் பிக் பாஸ் நேயர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது என்று கூறலாம்.

இவர் நடிகர் கவினின் பாலிய சிநேகிதன். பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று இப்போது கோலிவுட்டில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நடிகர் தான் கவின். ஏற்கனவே, சீசன் 3 இன் போது கவினின் நண்பராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரதீப், “லாஸ்லியாவின் பின்னாடியே சுற்றிக்கொண்டு கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்தவில்லை” என்று கூறி கவினை பளார் என்று அறைந்திருக்கிறார்.

அப்படிப்பட்ட இவர் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியளராக நுழைந்துள்ளார் என தெரிந்ததும் இவர் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் தலைகீழாக பிரதீப்பின் பேச்சும் செயலும் உள்ளன. பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், பிரதீப்பின் லீலைகள் வரிசையாக வெளியாகி வருகிறது.

பிரதீப்பின் மட்டமான பேச்சுக்கள் சக போட்டியாளர்களை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் கோபப்படுத்தியுள்ளது. நேற்று பிக் பாஸ் வீட்டில் நேற்று நடந்த டாஸ்க்கில் பெண் போட்டியாளர்கள் தோற்று போனால், அவர்களின் மேக்கப் பொருட்களை பிக் பாஸிடம் கொடுத்துவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதற்கு, பிரதீப், பெண்கள் மேக்கப் இல்லாமல் இருந்தால்தான் உண்மை முகத்தை பார்க்க முடியும், நான் அதை பார்க்க விரும்புகிறேன் என்று வெறுப்பூட்டும் வகையில் பேசியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், நடிகை விசித்ராவிடம் அடுத்த டாஸ்க்கில் தோற்றுப் போனால் ஆண் பெண் இருவரும் ஒன்றாக ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என்று தண்டனை கொடுத்தால் எப்படி இருக்கும் என்று அவர் கூறியது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளதும். மேலும், பலரும் பிரதீப்பின் பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், விசித்ராவுடன் ஒரே பெட்டில் ஒன்றாக படுக்க ஆசைப்படுவதாக வாயை விட்டிருக்கிறார்.

இதனால் ஆவேசமடைந்த நடிகை விசித்ரா. ““ என் கூட ஒரே பெட்ல படுக்கணுமா, உன்னால முடியுமா?. வார்த்தையை பார்த்து பேச வேண்டும்.” என்று பிரதீப்பை கண்டித்துள்ளார். மேலும், பிரதீப்பின் நடத்தைகளைக் கவனித்து வந்த ரசிகர்கள், பொம்பளப் பொறுக்கியா இருப்பானோ என்று சோஷியல் மீடியாக்களில் கமென்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே, நடிகை விசித்ரா கண்டித்தும் அடங்காத பிரதீப், வாய் அடங்காமல் ரவீனாவிடம் நீயும் நானும் ஒரு பெட்டில் படுத்து தூங்கலாமா என்று கேட்டு பகீர் கிளப்பியுள்ளார்.

மேலும், பிரதீப் செய்யும் லீலைகள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பட்டிதொட்டி எங்கும் ரசிகர்களை ஈர்த்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பார்த்து வரும் நிலையில், பிரதீப்பின் தகாத நடத்தைகளும், வக்கிரமான வார்த்தைகளும் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன் பிரதீப்பின் லீலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கும் பிரதீப் எப்போது வேண்டுமானாலும் எலிமினேட் ஆகிவிடுவார் போலத்தான் தெரிகிறது.