மஹாலக்ஷ்மிக்கே விபூதி அடித்த ரவீந்திரன்… ஏமாற்றம் அடைந்த விரக்தியில் மஹாலக்ஷ்மி…

0
Follow on Google News

VJ மகாலட்சுமி சீரியலில் நடிப்பதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்தபோதே தனக்கென ஒரு ரசிகர் பட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோதே அணில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்பு தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் மகாலட்சுமி. மேலும் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி – அணில் தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உண்டு.

திருமணம் முடிந்து சில சிறிது காலம் இடைவேளைக்குப் பின்பு மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் மகாலக்ஷ்மி. அப்போது சீரியல் நடிகர் பாஸ்கர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மகாலட்சுமியும் – பாஸ்கரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனால் கணவரை பிரிந்த மகாலட்சுமி புதிய காதலன் பாஸ்கர் உடன் குடும்பம் நடத்த தொடங்கி விட்டார் என கிசு கிசுக்கள் வெளியானது.

ஆனால் பாஸ்கர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அவருடைய மனைவி மகளிர் காவல் நிலையத்தில் பாஸ்கர் மற்றும் மகாலட்சுமி இருவர் மீதும் புகார் தெரிவித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார். அடுத்த சில நாட்களில் மஹாலக்ஷ்மி – பாஸ்கர் விவகாரம் என்னாச்சு என்று தெரியாதபடி அமைதியானது. இந்த நிலையில் கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார் மஹாலக்ஷ்மி.

திடீரென மஹாலக்ஷ்மி- ரவீந்திரன் திருமணம் செய்து கொண்டது, சினிமா வட்டாரத்தில் மட்டுமில்லாமல், மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய அழகினால் தமிழக இளைஞர்களை தன் வசப்படுத்தி கொண்ட மகாலக்ஷ்மி, உடல் பருமன் அதிகம் கொண்ட ரவீந்திரனை திருமணம் செய்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

அடிப்படையில் கோடீஸ்வரர் குடும்பத்தை சேர்ந்த ரவீந்திரன் பெரும் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பதால் தான், அவருடைய உடல் பருமனை பொருட்படுத்தாமல் கூட மஹாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டார் என்கிற என்கின்ற எழுந்தது. இருந்தும் தங்களுக்கு எதிராக வரும் எந்த ஒரு விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் ஹனிமூன், தொடர்ந்து பல யூ டுயூப் சேனலுக்கு ஜோடியாக பேட்டி கொடுப்பது என செம்ம ஜாலியாக இருந்து வந்தனர் மஹாலக்ஷ்மி – ரவீந்திரன் தம்பதியினர்.

இந்நிலையில் ரவீந்திரன் அடுத்தடுத்து தொடர்ந்து மோசடி புகார்களில் சிக்கி வாழ்ந்தவர், வசமாக சிக்கி சிறை செல்ல நேரிட்டது. பெரும் கோடீஸ்வரர் என கூறப்பட்ட ரவீந்திரன் எதற்காக பல கோடி மோசடி செய்து பணம் கொடுத்தவர்களை ஏமாற்ற வேண்டும் என்கிற விவாதம் எழுந்துள்ள நிலையில்,அந்த வகையில் இது போன்று வெளியில் தெரியாமல் இன்னும் எத்தனை மோசடிகள் ரவீந்திரன் மீது உள்ளது என்பது யாருக்கும் தெரியும் என்றும்.

அதே நேரத்தில் ரவீந்திரன் படம் தயாரித்த போது கூட வெளியில் சினிமா பைனாசியரிடம் கடன் பெற்று தான் படம் தயாரித்தார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவீந்திரனுக்கு கடும் முயற்சிக்கு பின்பு நிபந்தனையும் ஜாமின் கிடைத்துள்ளது. இந்நிலையில் கணவர் ரவீந்தர் சந்திரசேகர் பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், சில நாட்கள் சோசியல் மீடியா பக்கம் வராமல் முடங்கிக் கிடந்த மகாலட்சுமி மீண்டும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து டிசைன் டிசைனாக சேலைகளை அணிந்து கொண்டு போட்டோக்களை வெளியிட்டு விளம்பரம் செய்து வருகிறார்.

மேலும் சீரியலில் மஹாலக்ஷ்மி பிசியாக இருந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், ரவீந்திரன் கோடி கணக்கில் பணம் கொடுத்தவரை மட்டும் ஏமாற்றவில்லை, தன்னை பெரிய கோடீஸ்வரர் போன்று காட்டி கொண்டு மஹாலக்ஷ்மியையும் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார், ஆனால் ரவீந்திரன் பெரும் மோசடி செய்து வருவது இதற்கு முன்பு ஏதும் தெரியாமல் இருந்த மஹாலட்சுமிக்கு தற்பொழுது ஒவொன்றாக தெரியவரவும், ரவீந்திரனை விட்டு விலகும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.