வெளிநாடுகளில் ரவீணா – மணி அடித்த லூட்டி… பிக் பாஸ் உள்ளே போவதற்கு முன்பே இவர்களுக்குள் இப்படி ஒரு உறவா.?

0
Follow on Google News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் எப்படி சண்டைகளுக்கு பஞ்சம் இருக்காதோ அதேபோல் காதல் ஜோடிகளுக்கும் பஞ்சம் இருக்காது. பிக்பாஸ் முதல் சீசனில் டாப் போட்டியாளராக இருந்த ஓவியா, அந்த சீசன் டைட்டில் வின்னரான ஆரவ்வை துரத்தி துரத்தி காதலித்தார். ஆனால் ஆரவ், ஓவியாவில் காதலுக்கு நோ சொல்லிவிட்டதால், இந்த காதல் ஜோடி கைகூடாமல் போனது.

இதையடுத்து இரண்டாவது சீசனில் யாஷிகா ஆனந்த், மகத்தை உருகி உருகி காதலித்தார். ஆனால் மகத் தனக்கு ஏற்கனவே ஆள் இருப்பதாக கூறி யாஷிகாவை கழட்டிவிட்டார். மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா காதலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் முடிந்ததும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து நான்காவது சீசனில் பாலா – ஷிவானி இடையே ஒரு லவ் டிராக் ஓடியது. ஷிவானியின் அம்மா கண்டித்ததால் அது அப்படியே காத்துவாக்குல கடந்துபோனது. பின்னர் ஐந்தாவது சீசனில் அமீர் – பாவனி இடையே காதல் உருவானது. அவர்கள் இருவரும் தற்போது லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வருகின்றனர். அடுத்த ஆண்டு இந்த ஜோடி திருமணமும் செய்துகொள்ள உள்ளது.

ஆறாவது சீசனில் ஒரு ஒருதலைக் காதல் ஜோடியாக ஷிவின் – கதிரவன் இருந்து வந்தனர். ஷிவின் கதிரவனை ஒருதலைபட்சமாக காதலித்தார். ஆனால் கதிரவன் தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தி ஷிவினின் காதலுக்கு எண்ட்கார்டு வைத்தார். இப்படி சீசனுக்கு ஒரு காதல் ஜோடியாவது உருவாகும் அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் 7-வது சீசனில் மணி – ரவீனா இருவரும் காதல் ஜோடியாகவே உள்ளே வந்தனர்.

இந்த சூழலில் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில், ரவீனாவின் குடும்பத்தில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர். ரவீனா குடும்பத்தினர் ரவீனா – மணி ரிலேஷன்ஷிப் குறித்து மிகவும் கடுமையாக எச்சரித்தனர். “உன் மேல கோவமாக இருக்காங்க, அம்மா எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டாங்கனு போய் சொல்லிக்கிட்டு இருக்க. நீ இங்க ஒன்னும் மணிக்காக விளையாட வரலை. இது நமக்கு தேவையும் கிடையாது” என மிகவும் கடுமையாக எச்சரித்தனர்.

மேலும், ரவீனாவின் கேமை விளையாட மணி ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதை தொடர்ந்து மணியிடம் சென்று “இந்த ஷோவில் தனியா உட்கார்ந்து பேசவா வந்தீங்க. இனிமே அது போல தனியா கூட்டிட்டு போய் பேசாத” என நேரடியாகவே கண்டித்துவிட்டார். இந்ந நிலையில், ரவீனாவின் ஆண்ட்டியின் செயலுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

அதாவது, டாக்சிக் என சொல்லி பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பிக் பாஸ் வீட்டிற்கு வரும் முன்னரே மணி மற்றும் ரவீனா எப்போதும் எங்கேயாவது ஊர் சுற்றுவது ரீல் செய்வது என்று தான் இருந்தனர். ரவீனாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் போனாலே மணியுடன் இருக்கும் வீடியோ தான் அதிகமாக இருக்கும். இவர்கள் முன்னரே காதல் செய்கிறார்கள் என்று வெளிப்படையாக தான் உள்ளது.

அப்போதெல்லாம் இவர்களுடைய குடும்பத்தினருக்கு அது தவறாக தெரியவில்லையா? இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து இவ்வளவு பொங்குகிறார்களே இதெல்லாம் நிஜத்தில் நடப்பதா? இல்லை கண்டன்டு டிராமாவா? என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது என்றும் பலர் கமெண்ட்களில் பத்த வைக்கின்றனர். மேலும் இதெல்லாம் தெரியாதது போன்று அந்த ஆன்ட்டி ரவீனா மற்றும் மணியை திட்டியுள்ளது பெரும் எதிர்ப்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமில்லாமல் யாரும் எதிர்பார்க்காத நிலையாக ஓவர் நைட்டில் இப்போது மணிக்கு ஆதரவாளர்கள் அதிகமாகி விட்டார்கள். மணிக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்தால் கண்டிப்பாக அவர் இறுதிப் போட்டியில் பைனல் லிஸ்டில் இருக்கும் ஐந்து பேரில் ஒருவராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறி இருக்க வேண்டிய மணியை, ஓவர் நைட்டில் ஒபாமா ஆக்கிவிட்டார் ரவீனாவின் பூமர் ஆன்ட்டி. தற்போது இவரை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் நிறைய மீம்ஸ்கள் இரண்டாகி கொண்டு இருக்கின்றன.