நெப்போலியனை பொது இடத்தில் அசிங்கப்படுத்திய விஜய்… அவமானத்தில் நெப்போலியன் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் நெபோலியன், நடிகர், அரசியல்வாதி, தொழில் அதிபர் என பல முகம் அவருக்கு இருந்தாலும், மனிதாபிமானம் கொண்ட நல்ல மனுஷன் நெபோலியன் என்கிற பெயர் அவருக்கு உண்டு, குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகியுள்ள நடிகர் நெபோலியன், விளம்பரம் இல்லாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றவர், அவருடைய பிறந்த நாளில், பல முக்கிய பிரபலங்கள் அமெரிக்கா சென்று வாழ்த்தியதை பார்த்த போதே உணர் முடியும் அவர் பல கோடி சம்பாரிப்பது போன்று பல நல்ல மனம் படைத்த உள்ளகளையும் வென்று எடுத்துள்ளார்.

இப்படி பட்ட ஒரு நல்ல மனிதனிடம் அநாகரிகமாக நடிகர் விஜய் நடந்து கொண்ட சம்பவம் ஓன்று வெளியாகியுள்ளது, சினிமாவில் அவ்வப்போது நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நடித்து வருகிறார் நெப்போலியன். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் விஜய் உடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக நெப்போலியன் நடித்திருப்பார்.

அமெரிக்காவில் உள்ள நண்பர்கள் இந்தியாவில் நெப்போலியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை பார்ப்பதற்கு விருப்பம் தெரிவித்து போக்கிரி படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்துள்ளனர், அப்போது அவர்கள் போக்கிரி படத்தின் ஹீரோ நடிகர் விஜய் உடன் ஒரு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டதை தொடர்ந்து, நடிகர் நெப்போலியன் அதற்கு என்ன.? உடனே எடுத்து விடுவோம் என நடிகர் விஜய் இருக்கும் கேரவனுக்கு நண்பர்களை அழைத்து சென்றார் .

நெப்போலியன் நண்பர்கள் அனைவரும் அமெரிக்காவில் தொழில் அதிபர்களாக இருக்க கூடியவர்கள், இருந்தும் நடிகர் விஜய் உடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என ஒரு ஆசை அவர்களுக்கு, அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில், நண்பர்களுடன் விஜய் இருக்கும் கேரவன் கதவை திறந்து உள்ளே செல்ல நெப்போலியன் முயன்ற போது அங்கே கதவு அருகில் இருந்த காவலாளி நெப்போலியன் கையை பிடித்து இழுத்து கேரவன் கதவை திறப்பதை தடுத்துள்ளார்.

விஜய் சார பார்க்க வேண்டும் என நெப்போலியன் தெரிவிக்க அதெல்லாம் முடியாது என காவலாளி பதிலளிக்க, தனது நண்பர்கள் மத்தியில் நடிகர் நெப்போலியனுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அங்கே இருந்த காவலாளிக்கும் நெப்போலியன் இடையே கடும் வாக்குவாதம் முற்றி, அங்கே படப்பிடிப்பில் இருந்தவர்கள் அனைவரும் அந்த இடத்தில குவிந்தனர், இதனை தொடர்ந்து வெளியில் நடக்கும் அனைத்தையும் கேரவன் உள்ளே இருந்தபடி கவனித்து கொண்டிருந்த நடிகர் விஜய்.

கேரவன் கதவை திறந்து வெளியில் வந்த போது, தன்னுடன் சண்டையிட்ட காவலாளியை கண்டித்து தன்னை உள்ளே அழைப்பார் விஜய் என எதிர்பார்த்திருந்தார் நெப்போலியன். ஆனால் கதவை திறந்த விஜய் வெளியில் வந்து நெப்போலியனை பார்த்து, உங்களுக்கு அறிவு இருக்கா.? மேனஸ் இருக்கா.? அவர் தான் என்னை பார்க்க முடியாது என்று சொல்கிறார்ல, சரி என்று போக வேண்டியது தான, தேவையில்லாமல் அவருடன் சண்டையிட்டு ஏன் கூச்சல் போட வேண்டும்.

என நெப்போலியன் நண்பர்கள் மத்தியில் நெப்போலியனை அசிக்கப்படுத்தும் விதத்தில் பேசிவிட்டு கேரவன் உள்ளே சென்று கதவை அடைத்து விட்டார் விஜய். இதனால் அமெரிக்காவில் இருந்து நண்பர்கள் மத்தியில் விஜய் இப்படி பேசிவிட்டாரே என அசிங்கப்பட்டு அமைதியாக இருந்த நெப்போலியனிடன், அவருடைய நண்பர்கள். வருத்தப்பட வேண்டாம், மனிதர்களை மதிக்க தெரியாத ஒரு நடிகரிடம் நாங்கள் புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என நெபோலியேனிடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..