கமல்ஹாசனை ஒரு பொருட்டாகவே மதிக்காத மாயா – பூர்ணிமா…. குப்பையில் வீசப்பட்ட கமல்ஹாசன் அட்வைஸ்…

0
Follow on Google News

பிக் பாஸ் வீட்டில் நடந்த பூகம்பம் டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியே சென்றனர், அவர்களுக்கு பதிலாக இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வந்து இருக்கிறார்கள். வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் இந்த பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே விஜய் வர்மா, அனன்யா உள்ளே நுழைந்து உள்ளனர். புதிய போட்டியாளர்கள் வந்துள்ளதால் யார் எவிக்ட் ஆவார்கள் என பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் அக்‌ஷயா மற்றும் பிராவோ ஆகிய இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து, வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார கேப்டனாக நிக்சன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் இந்த வாரம் கேப்டனாக இருக்கும் நிக்சனால் அநீதி ஏற்பட்டு என நினைத்தால் யார் வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம் என பிக் பாஸ் ஒரு சலுகை வழங்கினார். மேலும் மணியை அடித்து புகாருக்கு ஏற்ப நிக்சன் காரணத்தை சொன்னால் அந்தக் காரணம் எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்டால் கேப்டன் பதவி பறிபோகும் என பிக் பாஸ் கூறியிருந்தார். மேலும் அவர் அடுத்த வாரம் நேராக நாமினேஷனுக்கு செல்வார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்ஸனின் கேப்டன்சிக்கு எதிராக விஷ்ணுவை தூண்டி விடும் விதமாக மாயாவும், பூர்ணிமாவும் போட்டு வருகிறார்கள். அதிலும் மாயா, பூர்ணிமா வாக்குவாதம் செய்கிறார்கள். நிக்சனை பிளான் செய்து மாட்டிவிட நினைக்கும் மாயாவின் செயலுக்கு எதிராக பூர்ணிமா நிற்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவதம் நடக்கிறது.

இதுவரையில் மாயா, பூர்ணிமா, அவர்கள் இருவரும் சேர்ந்து யாரை என்ன செய்ய வேண்டும், எப்படி சண்டை போடலாம் என சதி திட்டம் திட்டி விளையாடுகிறார்கள். பூர்ணிமா முழுக்க முழுக்க மாயாவின் கையில் தான் இருக்கிறார். மாயா, பூர்ணிமாவிடம் மற்றவர்களை பற்றி ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி அவர்களிடம் அவரஒ மோத விட்டு வேடிக்கை பார்த்து அவர் விளையாட்டை விளையாடிகிறார். ஆனால் உண்மையில் அது ஆடியன்ஸுக்கு பிடிக்கவில்லை.

இதன் வெளிப்பாடாக பூர்ணிமாவுக்கு எதிராக வார எபிசோட்டில் யாராவது பேசினால் அவர்களுக்கு கைத்தட்டு கிடைக்கிறது. இதை அவரால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும் வீட்டில் எப்போது விதியை மீறி பூர்ணிமா, மாயா செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு பல முறை வார்னிங் கொடுத்த பிறகு இருவரும் அதையே செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த வாரம் கமல் ஹாசன் பெயர் குறிப்பிட்டு மைக்கை முடியும், கழட்டி வைத்தும் பேச கூடாது என பூர்ணிமா, மாயாவிற்கு வார்னிங் கொடுத்து இருந்தார்.

ஆனால் அதை எல்லாம் சற்றுக் காதில் வாங்கி கொள்ளலாம், மீண்டும் நேற்று பூர்ணிமா, மாயா விதிமீறல் செய்து உள்ளனர். மைக்கை முடி பூர்ணிமா, மாயா காதில் முனுமுனுத்து பேசி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் பூர்ணிமாவிடம் பேச முழுதாக அந்த வீட்டின் பக்கம் அமர்ந்து பேசி இருக்கிறார்.

இதை எல்லாம் பார்த்த ரசிகர்கள், மைக் பற்றி கமல் ஹாசன் சொல்லியும் மதிக்க வில்லை, கமல் ஹாசனையும் மதிக்கல என குறிப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கமல், நான் இல்லாமல் ஒரு கண்டன்ட் யோசிக்க என்று சொன்னது போல தற்போது மாயா – பூர்ணிமா இருவரும் தங்களை வைத்தே கண்டன்ட்டை பூர்ணிமா வருவது போலவே தெரிகிறது.

மேலும் ரசிகர்கள் மாயா, பூர்ணிமாவை நம்ப முடியாது. அவர்கள் கேம் விளையாட என்ன மாதிரியான தந்திரங்களை வேண்டுமானாலும் செய்வார்கள் என சொல்லி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க இந்த வார நாமினேஷனில் தினேஷ், சரவணன் விக்ரம், ஜோவிகா, மணி, கூல் சுரேஷ், விசித்ரா, பூர்ணிமா, அனன்யா, ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கிறார்கள். பூர்ணிமா, இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.