இரவில் வனிதா முகத்தில் குத்து விட்டது யார்.?எல்லாமே செட்டப் தானா… நடிகை கஸ்தூரி சொன்ன பகீர்..

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நாளுக்குநாள் பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. 6 சீசன்களை கடந்து தற்போது பிக் பாஸின் 7 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் 7 வது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இவர் தான் இந்த முறை பிக் பாஸ் டைட்டில் வின்னர் என மக்களால் பெரிதும் பேசப்பட்டு வந்த நபர் பிரதீப் ஆண்டனி. தனது கேம் ஸ்டராட்டர்ஜி, தான் கடந்து வந்த பாதை என இந்த பிக் பாஸ் சீசனில் பெரும் அளவிலான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

கூல் சுரேஷ் மற்றும் பிரதீப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றிப்போய், வார இறுதியில் பிக் பாஸ் பெண் போட்டியாளர்கள் ஒன்று சேர்ந்து ‘ப்ரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கமல் ஹாசன் முன்பு வைத்ததன் விளைவாக அவர் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியரற்றப்பட்டார். பிரதீபுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது அநியாயம், இது சரியான தீர்வே இல்லை என்று பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்து வந்தனர்.

ஒட்டுமொத்த இணையத்தலமே ப்ரதீப்பைய் பற்றி தான் பேசியது. மேலும், ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் முதல் இடத்தை பிரதீப் ஆண்டனி என்ற ஹாஷ்டாக் பிடித்தது. கமல் ஹாசன் முதல் ரெட் கார்ட் கொடுத்த போட்டியாளர்கள் என அனைவரையும் பிரதீப் ரசிகர்கள் இணையத்தில் வறுத்தெடுக்க தொடங்கினர். அதே நேரம் பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்தது சரி என வனிதா பேசி வந்தார். இந்த நிலையில், தன் மீது பிரதீப் ஆதரவாளர் தாக்குதல் நடத்தியதாக வனிதா குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை வனிதா நள்ளிரவில் தனது காரில் வீட்டிற்கு வந்தபோது திடீரென தன் முன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தோன்றி ரெட் கார்டு கொடுக்கறீங்களா? அதுக்கு நீ என்ன சப்போர்ட் வேறயா? என்று கூறி முகத்தில் பலமாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த சம்பவத்தைப் காவல் நிலையத்தில் தெரிவிக்கும்படி என்னை வற்புறுத்தினாள்.

ஆனால், இந்த சம்பவம் பற்றி சொன்னால் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தாக்கியவரை தேடினேன். நான் திரையில் தோன்றும் உடல் நிலையில் இல்லாததால் எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இதை பார்த்து பலரும் பிரதீப்பை விமர்சித்து பேசி இருக்கிறார்கள். ஆனால், சிலர் வனிதாவுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

பின்னர் இந்த விவகாரம் தெரிந்து உடனே பிரதீப், வனிதாவிடம் தனக்கு இதில் சமந்தம் இல்லை என சொல்லி மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “அடிச்சவன் யாரோ, அதுக்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் reviewவால் வந்த வினை. போலீசுக்கும் போகமாட்டார். வனிதாவின் ருசிகரமான பொய்கள் யூடியூப்க்கும் விஜய் டிவிக்கும் contentக்கு வேண்டுமானால் பயன்படும், போலீஸிடம் வியாபாரமாகுமா.

I should show sympathy, but சனியன் இந்த நேரம் பார்த்து எனக்கு மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற பொழுதிலும் நெஞ்சில் ஈரமே இல்லாமல் வனிதா அண்ட் கோ அவரை மேலும் மேலும் gherao செய்தது நினைவுக்கு வருகிறது… It’s only a game அப்போ தெரியலையா? Nobody deserves violence, not just you “ எனக் குறிப்பிட்டு உள்ளார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான காமெடி நடிகையாக திகழ்பவர் மதுமிதா. இவர் தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

அந்த சீசனில் வனிதா, கஸ்தூரி இருந்தார்கள். பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் தன்னுடைய கையை கத்தியால் அறுத்து இருந்தது மிகப்பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. அப்போது மதுமிதாவிற்கு ஆதரவாக யாருமே நிற்கவில்லை. அதற்குப்பின் நிகழ்ச்சியில் இருந்து மதுமிதா வெளியேறினார். தான் தற்கொலை செய்ததன் காரணம், நிகழ்ச்சியில் எல்லோரும் சேர்ந்து குரூப் ராகிங் செய்து கொடுமைப்படுத்தினார்கள். இதனால் மன உளைச்சல் ஆளாகி கை அறுத்து கொண்டேன் என்றெல்லாம் கூறி இருந்தார்.