பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் மாயா… இதுக்கு மேல கமல்ஹாசன் நினைச்சாலும் காப்பாற்ற முடியாது…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இப்போது பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜனவரி 3ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ்-ன் அறிவிப்பை கேட்டதும் இவர்தான் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ்-ல் இருந்து வெளியேற போகிறார், இல்லை இல்லை இந்தப் போட்டியாளர் தான் வெளியேறுவார் என்று ஆளுக்கு ஒரு போட்டியாளர்களை சுட்டிக்காட்டி ரசிகர்கள் பலரும் விவாதம் செய்து வருகின்றனர். அப்படி ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் என்ன அறிவிப்பை வெளியிட்டார், எந்த போட்டியாளர் அடுத்ததாக வெளியேறுவார் என்று ரசிகர்கள் அதிகம் கூறுகின்றனர் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இப்போது 94வது நாளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவிருக்கிறது.இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னராக வரப்போகிறார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது.இந்த டாஸ்க் குறித்து பிக் பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது, ஒன்பது லட்சத்தில் இருந்து இன்னும் பணம் அதிகரிக்கவும் செய்யலாம் அல்லது குறையவும் செய்யலாம் என்று பிக் பாஸ் கூறி உள்ளார். இதை அடுத்து அங்குள்ள போட்டியாளர்கள் பணப்பெட்டியை நான் எடுத்துக்கிட்டு கிளம்புறேன், நான் தூங்க போறேன் என்று பாவளா செய்து வருகின்றனர். குறிப்பாக, மணி விஷ்ணுவிடம் திடீர்னு என்ன வேணாலும் ட்விஸ்ட் நடக்கலாம் பெட்டியில் 20 லட்சம் திடீர்னு வச்சுட்டாங்கனா என்ன பண்ணுவ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்த கட்டத்தில் விஷ்ணு, மணி, தினேஷ் மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது மணி, 10 லட்சம் வந்துச்சுன்னா நான் எடுத்துக்கிட்டு வெளியேறிடுவேன் என்று கூறவே, அதற்கு தினேஷ் யாரும் எடுக்க மாட்டாங்க நம்ம நல்லா உசுப்பேத்தி விட்டு இருக்கோம். அதனால எவனும் எடுக்க மாட்டான் என்று சொல்லி சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் எந்தப் போட்டியாளர் வெளியிடுவார் என்று பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதாவது நடிகை விசித்ரா 12 லட்சம் பணம் வந்ததும் பெட்டியை தூக்கிக்கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதே சமயம், இன்னும் சிலர் மாயாவிற்கு தான் எப்படியும் டைட்டில் வின்னர் ஆக மாட்டோம் என்பது தெரிந்து விட்டது. அதனால் கிடைத்த வரைக்கும் லாபம் என்று பணத்தோடு கிளம்பி விட்டார் என்று கூறி வருகிறார்கள்.

இவ்வாறு போட்டியாளர்கள் குறித்து பல தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், உண்மையில் யார் பணத்தை எடுத்துக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.