தேடி வந்த சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு… வேண்டாம் என உதறி தள்ளிய பாலா…

0
Follow on Google News

நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, பொங்கல் திருநாளன்று சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரவிக்குமார் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.அதைத்தொடர்ந்து, படத்தின் ப்ரோமோஷன்காக சிவகார்த்திகேயன் பல்வேறு சேனல்களில் ஏகப்பட்ட பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு அவரை KPY பாலா பேட்டியெடுத்துள்ளார். இந்த பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முழுக்க முழுக்க ஃபண்ணாக இருந்துள்ளது. குறிப்பாக, இடையிடையே பாலாவை சிவகார்த்திகேயன் கலாய்த்தது, பாலாவுக்கு சிவகார்த்திகேயன் ஒரு இன்ட்ரோ கொடுத்தது என பேட்டி முழுவதும் கலகலப்பாக இருந்ததால் பார்வையாளர்களை முழுவதுமாக அந்த பேட்டியை பார்க்க வைத்துவிட்டது. இந்த கலகலப்பான பேட்டியில் நடந்த சில சுவாரசியமான விவாதங்களை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

ஏலியனை மையமாக வைத்து படமாக எடுக்கப்பட்டுள்ள அயலான் திரைப்படம் ஆறு ஆண்டுகால தாமதத்திற்கு பிறகு, இந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய இவ்வளவு தாமதம் ஏன் என்று பாலா கேள்வி எழுப்பி இருந்தார். படத்தின் தாமதத்திற்கு கொரோனா தான் காரணம் என்றும், படத்தில் சிஜி கூட சரியாக பண்ண முடியவில்லை அதனால்தான் இவ்வளவு தாமதம் என்றும் பதில் அளித்த சிவகார்த்திகேயன், அயலான் படம் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறப்போகிறது என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார், தெலுங்கு சினிமாவின் அடையாளமாக பாகுபலி இருப்பது போல், தமிழ் சினிமாவின் அடையாளமாக அயலான் மாறும் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, பேட்டியில் பேசிய சிவகார்த்திகேயன் பாலாவிற்கு பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார். Kpy பாலா சினிமாவின் மிகப்பெரிய ஹீரோக்கள் கூட செய்ய தயங்கும் உதவிகளை செய்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இது குறித்து பேசிய போது, கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் மக்களுக்குத் தேவையான உதவிகளை தன் கைக்காசை போட்டு உதவி செய்வது என்பது பெரிய விஷயம் என்றும், வெள்ள பாதிப்பின் போது நீயும் அமுதவாணனும் சேர்ந்து களத்தில் இறங்கி உதவி செய்தது வேற லெவல் என்றும் சிவகார்த்திகேயன் பாலாவை பாராட்டியிருந்தார். மேலும், பேட்டியில் பாலாவை பற்றி பல விஷயங்களை சிவக்கார்த்திகேயன் பகிர்ந்து இருந்தார்.

அதாவது, முன்பு கனா படத்தில் நடிப்பதற்கு பாலாவிடம் கேட்டபோது, அவர் வர மறுத்து விட்டாராம். அதேபோல அயலான் படத்திற்கும் நடிக்க அழைத்தபோது பாலா வரவில்லையாம். இந்த விஷயத்தை சிவகார்த்திகேயன் பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ஆனால் பாலா சிவகார்த்திகேயன் சொல்வதற்கு எல்லாம் தேங்க்யூ அண்ணா லவ் யூ அண்ணா என்று சொல்லி மழுப்பிக் கொண்டிருந்தார். மேலும் அயலான் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் பேசவே பேசாது என்பதால் அதில் நடிப்பதற்கு யோசித்தேன் என்று பாலா கூறினார்.

அதற்கு சிவகார்த்திகேயன் ஆமா நீ வாயை தொறந்தா மூட மாட்ட உனக்கு எப்படி அந்த ரோல் செட் ஆகும் என்று கூறினார். மீண்டும் பாலா நன்றி சொல்லவே, உடனடியாக சிவகார்த்திகேயன் நான் உன்னை திட்டுறேன் …பாராட்டவில்லை அப்புறம் ஏன் நன்றி சொல்ற …என்று சொல்லி இருக்கிறார்.இருவர் இடையேயான கலகலப்பான இந்த விவாதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி சிவகார்த்திகேயனின் அயலானும், தனுஷின் கேப்டன் மில்லரும் மோதவிருக்கின்றன. அயலான் படம் கண்டிப்பாக குழந்தைகளின் ஃபேவரிட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தனுஷின் கேப்டன் மில்லர் குடும்பங்களுக்கான படமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இரண்டு படங்களின் ரிலீஸ் செய்யும் எதிர்பார்த்து சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.