இதெல்லாம் ஒரு மூஞ்சியா… பாக்கவே பிடிக்கல… விசித்ராவின் ஓவர் அட்ராசிட்டிக்கு ஆப்பு வைத்த கமல்ஹாசன்..

0
Follow on Google News

பிக் பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து விட்ட நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். ஏற்கனவே விஷ்ணு இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் இன்னும் 4 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்றும் மற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் விசித்திரா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், “ ‘சில மூஞ்சிகளை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த வெறுப்பு போகவே மாட்டேங்குது. இது எல்லாம் இருந்தென்ன பிரயோஜனம் வாழ்ந்து என்ன பிரயோஜனம். இப்படிப்பட்ட ஆளுடன் எப்படி குடும்பம் நடத்துவார்கள், விட்டுட்டு ஓட வேண்டியது தான். ஒரு மூன்று மாதம் இவர்களுடன் ஒரே வீட்டில் இருக்க முடியவில்லை.

இவருடன் எல்லாம் எப்படி ஒருவர் குடித்தனம் நடத்துவார், திரும்பி கிரும்பி வந்திடாதம்மா தாயே, ஒழுங்கா வாழ்க்கையை நடத்து. இவனுடயெல்லாம் வாழ்வதற்கு நீ தனியாகவே இருந்து விடலாம்..” என கடுப்பில் பேசி இருப்பார். இது வேறு யாரையும் இல்லை, தினேஷ் – ரக்க்ஷிதா பற்றி தன, இந்நிலையில் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அத்துடன், விசித்திரா ஏன் இப்படி பேசுகிறார் என தெரியாமல் ரசிகர்கள் புலம்பினார்கள். விசித்ராக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலர் பேசினார்கள்.

அதிலும் சில தினங்களுக்கு முன்பு இவருக்கெல்லாம் உண்மையான காதலே கிடைத்திருக்காது. அப்படியே கிடைத்திருந்தாலும் இவர் அந்த காதலை சரியாக பயன்படுத்தி இருக்க மாட்டார். புரிந்து கொள்ளவும் இவருக்கு தெரியாது. அன்பை எப்போதுமே இவர் நடிப்பு என்ற கோணத்தில் தான் பார்க்கிறார் என்று தினேஷ் மீது பெரிய குற்றச்சாட்டை வைத்திருந்தார். ஏற்கனவே தினேஷூம் அவருடைய மனைவி ரச்சிதாவும் பிரிந்து இருக்கின்றனர். அது குறித்து தினேஷ் பலமுறை பிக் பாஸ் வீட்டிற்குள் கண்ணீரோடு பேசி இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் விசித்திரா இப்படி தினேஷ் பற்றி குற்றம் சுமத்துவதால் அவருடைய பர்சனல் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவில்லையா என்று விசித்ராவை நோக்கி பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இபப்டியான நிலையில் கமல்ஹாசன் நேற்றைய எபிசோடில் விசித்ராவை வைத்து செய்து விட்டார்.

அதில் கமல் விசித்ராவிடம், நீங்கள் கேமராவுக்காக தனியாக பேசுகிறீர்களே என்று கேட்க, விசித்ரா நானா? என்று எதுவும் தெரியாதது போல சொன்னார். அதற்கு ஆமாம் என்று சொல்லி, இன்னொருவருடைய பர்சனல் வாழ்க்கைக்குள் இறங்கி பேசுவது என்று கமல் கேட்டு முடிக்கவில்லை.. உடனே விசித்ரா எதை சொல்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு கமல் அதை நானும் மறுபடி சொல்லி இன்னொருவரை புண்படுத்த விரும்ப வில்லை என்று சொல்ல, பேசினேன்… பேசினேன்… என்று ஒத்துக்கொண்டார் விசித்ரா. அதற்கு கமல் அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம்.. இன்னொருத்தருடைய கல்யாணத்திற்கு நாம் கவுன்சிலராக இருக்க முடியாது என்று பேசினார். ஆரம்பத்தில் இதற்கு மழுப்பிய விசித்ரா பின்னர் ஆமாம் சார் தப்பு தான் என்று ஒப்புக்கொண்டார். முன்னதாக, மாயா பூர்ணிமா கூட ரஷிதாவின் விஷயத்தை இழுத்து ஏதாவது தினேஷை செய்யலாம் என்று திட்டம் தீட்டியது பெரும் விவாதத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.