விஜய்காந்துக்காக அந்த விஷயத்தை கூட செய்யாத நடிகர் சங்கம்… நெஞ்சில் கொஞ்சம் கூட நடிகர்களுக்கு ஈரம் இல்லையா.?

0
Follow on Google News

தமிழ் திரையுலகை வாழ வைத்த நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் மரணம் அடைந்தது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி விட்டது. விஜயகாந்தின் உடலை கடைசியாக ஒரு முறை பார்த்து விட வேண்டும் என தமிழகத்தின் கடை கோடியில் இருக்கும் ஒரு சாமானியன் கூட பல மணி நேரம் பயணம் செய்து சென்னையில் வந்து விஜயகாந்த் உடலை கூட்ட நெரிசலில் பார்த்து கண்ணீர் விட்டு சென்ற நிலையில் ,

தமிழ் சினிமாவைச் சார்ந்த பல நடிகர்கள் சென்னையில் இருந்து கொண்டே விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வராமல் இருப்பது, விஜயகாந்தின் மரணத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நன்றி கெட்ட பலர் உள்ளார்கள் என்பது மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது. நடிகர் சூர்யா, கார்த்திக், தனுஷ், சிம்பு, விஷால் போன்ற நடிகர்கள் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்திருந்த நிலையில்,

விஜயகாந்த் மரணத்திற்கு உடனடியாக சென்றால் ஆங்கில புத்தாண்டை கொண்டாட முடியாது என்பதால் வெளிநாடுகளிலே இருந்துவிட்டு ஆங்கில புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்ததால், விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்கின்ற ஆதங்கம் சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் சத்யராஜ் போன்ற விஜயகாந்தின் சமகால நடிகர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் கூட, தங்களுடைய அனைத்து பயணங்களையும் ரத்து செய்துவிட்டு விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிகழ்வும் அரங்கேறியது. இந்த நிலையில் விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது தமிழ் சினிமாவில் ஒரு துணை நடிகராக வலம் வந்த விஜய் சேதுபதி இன்று மிகப்பெரிய நட்சத்திர நடிகராக இருக்கிறார்.

இந்த நிலையில் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி, விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் வெளிநாடு சென்ற நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, இங்கே இருக்கும் நடிகர்கள் அனைவரும் ஒரு வாகனத்தில் ஏறி விஜயகாந்தின் உடலுடன் சேர்ந்து நாமும் ஊர்வலமாக செல்லலாம் அதுதான் அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை என விஜய் சேதுபதி சில முயற்சிகளை எடுத்துள்ளார்.

ஆனால் இதற்கு எந்த ஒரு நடிகர்களும் செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக இது போன்ற முயற்சிகளை விஜய் சேதுபதி போன்ற இளம் நடிகர்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும், ஆனால் சிவகார்த்திகேயன் போன்ற பல இளம் நடிகர்கள் சென்னையில் இருந்து கொண்டே விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வராத நிலையில், மேலும் விஜய் சேதுபதியின் இந்த முயற்சிக்கு சினிமா துரையை சேர்த்த யாரும் ஒத்துழைக்காததால், விஜய் சேதுபதியின் இந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுவாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரும் மரணம் அடைந்தால் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடத்துவது நடிகர் சங்கத்தின் வழக்கம். அந்த இரங்கல் கூட்டத்தில் சினிமா துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு, மறைந்த நடிகர்களின் நினைவுகள் பற்றி பேசுவார்கள். ஆனால் விஜயகாந்த் மரணம் அடைந்து நாட்கள் கடந்து கொண்டிருக்கையில் இதுவரை விஜயகாந்திற்காக இரங்கல் கூட்டம் நடத்தப்படுவது குறித்து ஒரு சிறிய பேச்சு வார்த்தை கூட தமிழ் சினிமா வட்டாரத்தில் நடைபெறாமல் இருந்து வருகிறது.

நன்றி கெட்ட பலர் இருக்கும் இன்றைய தமிழ் சினிமா விஜயகாந்த் மரணம் அடைந்த அன்று முதல் அழிவை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டது, விரைவில் முழுவதும் அழிந்துவிடும் என விஜயகாந்தை நேசிக்கும் தமிழக மக்கள் பலர் சாபம் விடும் அளவுக்கு கொந்தளித்து வருவதை பார்க்க முடிகிறது. மேலும் கொஞ்சமாவது நன்றி இருக்காடா உங்களுக்கு என விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வராத நடிகர்களை மக்கள் காரி துப்பும் அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்தி வருவதை பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.