சினிமாவில் அடுத்த நயன்தாரா என் மகள் ஜோவிகா தான்… நள்ளிரவில் வனிதா முகம் பஞ்சரானது…

0
Follow on Google News

நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தன்னை தாக்கியதாக முகத்தில் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மேலும் என்னை கொடூரமாக தாக்கியது யார் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். அந்த நபர் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் என்று சொல்லி கொள்பவர். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டு விட்டு என் காரில் இறங்கி நடந்துக் கொண்டிருந்தேன்.

காரை என்னுடைய சகோதரி சௌமியா வீட்டருகே இருட்டான பகுதியில் நிறுத்தியிருந்தேன். எங்கிருந்தோ ஒரு ஆள் தோன்றி ரெட் கார்டு குடுக்ரீங்களா னு சப்போர்ட் வேரா என்று சொல்லி என் முகத்தில் பலமாக அடித்துவிட்டு ஓடிவிட்டார். வனிதாவிஜயகுமார் தெரிவித்து இருந்தார், மேலும் இதனால் காயம் ஏற்பட்ட இடத்தில் ரத்தம் வழிந்து பயங்கர வலியாக இருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் அருகில் யாரும் இல்லை.

நான் என் சகோதரியை கீழே வரும்படி அழைத்தேன், பிறகு அவர் இந்தச் சம்பவத்தைப் போலீஸில் தெரிவிக்கும்படி வலியுறுத்தினார். ஆனால் நான் அவளிடம், போலீஸில் தெரிவிப்பதில் நம்பிக்கை இழந்து விட்டேன் என தெரிவித்தேன். மேலும் அந்த மர்ம நபரின் கோரமான சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என வனிதா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தன்னை தாக்கியவர்கள் மீது இதுவரை போலீசில் புகார் தெரிவிக்காமல் இருப்பது குறித்து வனிதா மீது பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள். அதில் வனிதா மகள் ஜோவிகா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற படலாம் என்பதால், அனுதாபம் தேடி, அதன் மூலம் ஜோவிகாவுக்கு அதிக வாக்கு பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வராமல் காப்பாற்ற தான் வனிதா இது போன்று செயல்படுவதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.

இது குறித்து நடிகை கஸ்தூரி நக்கலாக கருத்து தெரிவித்துள்ளார், அதில், அடிச்சவன் யாரோ, அதுக்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் reviewவால் வந்த வினை. போலீசுக்கும் போகமாட்டார். வனிதாவின் ருசிகரமான பொய்கள் யூடியூப்க்கும் விஜய் டிவிக்கும் contentக்கு வேண்டுமானால் பயன்படும், போலீஸிடம் வியாபாரமாகுமா.? என வனிதா அடிவாக்கியதாக கூறப்படுவது விஜய் டிவிக்கு வேண்டுமானால் பயன்படும் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் என்ன தான் மகள் ஜோவிகாவை காப்பாற்ற வனிதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டாலும், ஓட்டிங் லிஸ்ட்டில் ஜோவிகா கடைசியில் இருக்கிறார். அந்த வகையில் ஜோவிகா இந்த வரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. இதனை தொடர்ந்து வனிதா தற்பொழுது மகள் நாமினேஷன் குறித்து பேசுகையில், ஜோவிகா இந்த வாரம் வெளியேறினாலும் எனக்கு சந்தோசம் தான், ஜோவிகாவுக்கு வெளியே அதிகமான வேலை இருக்கிறது.

ஜோவிகாவிற்கு இப்போது வயது 18 தான் ஆகிறது. இன்னும் இந்த இண்டஸ்ட்ரியில் 20 வருடங்களாக ஜோவிகாவால் இருக்க முடியும். அப்படிபார்த்தால் ஜோவிகாவும் திரிஷா, நயன்தாரா போல வருவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்த வனிதா, உண்மையில் எனக்கு அடிபட்டது தெரிந்திருந்தால் எனக்கு இந்த விளையாட்டே வேண்டாம் என்று தூக்கிப்போட்டு விட்டு வெளியே வந்து விடுவாள் என வனிதா பேசியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய மகள் ஜோவிகா திரிஷா, நயன்தாரா போன்று சினிமாவில் மிக பெரிய நடிகையாக வருவதற்கு வாய்ப்பு இருக்கு என வனிதா தெரிவித்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.