தனுஷ் கனவில் மண் அள்ளிப்போட்ட மாமனார் ரஜினிகாந்த்… சிவகார்த்திகேயனை வைத்து ஆட்டத்தை தொடங்கிய ரஜினி…

0
Follow on Google News

நடிகர் தனுஷ் தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து சினிமாவில் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்று கெத்தாக சுத்திக் கொண்டிருந்த தனுஷ், தற்போது சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்றதும், மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து விட்டு, சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

நடிகர் தனுஷ் தன் மகள் ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்து விட்டார் என்ற கோவம் ஒரு அப்பாவாக ரஜினிக்கு இருக்கத்தான் செய்கிறது. இதனாலேயே, ரஜினி தனுஷின் சினிமா கனவில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக ஒரு செயலை செய்திருக்கிறார். மேலும், தனுஷை சீன்டிப்பார்க்கத் துடிக்கும் ரஜினி நடிகர் சிவகார்த்திகேயனை பகடைக் காயாய் பயன்படுத்தியுள்ளார். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

சமீப காலமாகவே சிவகார்த்திகேயனுக்கு நேரம் சரியில்லை. திரும்பும் பக்கமெல்லாம் மோசமான விமர்சனங்களால் தாக்கப்பட்டு வருகிறார். இருப்பினும், இதையெல்லாம் கண்டுகொள்ளாத சிவகார்த்திகேயன் ஷூட்டிங்கில் மும்முரமாக வேலை பார்த்து வருகிறார். இப்படியான நிலையில், ரஜினியின் தலைவர் 171 படத்தில் நடிக்கும் வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது.

ஏற்கனவே, ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது ரஜினி ஒப்புக் கொள்ளவில்லையாம். இப்போது தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயனை களமிறக்க அவர் ஒகே சொல்லியிருக்கிறார். அந்த படத்தில் வேணாம்னு சொன்ன ரஜினி, இப்ப மட்டும் ஏன் வாலண்டியரா சிவகார்த்திகேயனை படத்தில் நடிக்க வைக்க துடிக்கிறார் என்று பலருக்கும் கேள்வி எழலாம். இதில்தான் ரஜினியின் தந்திரமே இருக்கிறது.

அதாவது, சினிமாவில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறியதும் ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த தனுஷ், இப்போது அடுத்தடுத்து நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதையெல்லாம் கவனித்த ரஜினி, தனுஷின் போட்டி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டு தனுஷை கடுப்பேற்ற திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இத்தனை வருடங்களாக மருமகனுக்குக் கூட தன் படத்தில் வாய்ப்பு தராத ரஜினி, இன்று சிவகார்த்திகேயனை தூக்கி விட முயற்சிப்பது பலரையும் சிந்திக்க வைக்கிறது. மேலும், சிவா கார்த்திகேயனும், இமான் சர்ச்சையில் வாங்கிய அடியை ரஜினி படத்தின் மூலம், மீண்டும் மார்க்கெட்டைப் பிடித்து விடலாம் என்று கனவுக் கோட்டைக் கட்டி வருகிறார்.

ஒரு பக்கம் தனுஷை வெறுப்பேற்ற சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் ரஜினி, இன்னொரு பக்கம் சினிமா கரியரில் விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் சிவகார்த்திகேயன் என திரையுலகில் பிரச்சினைகள் ஓடிக் கொண்டிருந்தாலும், லோகேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் வில்லனாக நடிப்பாரா இல்லை, நல்ல ஒரு கேரக்டர் ரோலில் நடிப்பாரா என்பது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது.