பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் ஜிபி முத்து… கெஞ்சி கதறும் விஜய் டிவி நிர்வாகம்.. என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து வந்த சீசனுக்கு கிடைக்கவில்லை. தற்பொழுது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஆறாவது சீசனுக்கு முதல் சீசன் போன்று மக்கள் மத்தியில் தற்பொழுது வரவேற்பு கிடைத்துள்ளது விஜய் டிவி நிர்வாகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்பொழுது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்ற நடிகைகள் பல தேவையின்றி சிறு சிறு விஷயங்களுக்கு அழுது வருவது அனுதாபத்தை தேடும் அவர்களின் நடிப்புத் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஒரு வாரம் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சி வீட்டிற்கு சென்ற மைனா நந்தினி தன்னுடைய மூக்குச்சளியை சிந்தி ஜி.பி முத்து அணிந்திருந்த கோர்ட்டில் தடவினார். உடனே கோட்டை கழட்டி தூக்கி எறிந்து விட்டார் ஜி பி முத்து.

இது ஜிபி முத்துவுக்கு மேலும் அனுதாபத்தை பார்வையாளர்கள் மத்தியில் பெற்று தந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலஹாசனை விட ஜிபி முத்துக்கு ரசிகர்கள் தற்பொழுது அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டின் உள்ளே செல்வதற்கு முன்பு ஜி பி முத்து நாங்கள் கூட்டுக் குடும்பம், என்னுடைய தம்பி பிள்ளைகளும், என்னுடைய பிள்ளைகளும் ஒரே வீட்டில் தான் இருக்கின்றோம்.

அனைவருக்கும் நான்தான் சம்பாதித்து கொடுக்கிறேன், இருந்தாலும் எனக்கு குடும்பமாக இருப்பதால் பெரும் மகிழ்ச்சியை தருகிறது. குழந்தைகளை விட்டுவிட்டு எப்படி நான் பிக் பாஸ் வீட்டில் உள்ளே இருக்கப் போகிறேன் என்பது தெரியவில்லை என்ற தயக்கத்துடன் தான் பிக் பாஸ் வீட்டின் உள்ளே வந்தார் ஜிபி முத்து. தற்பொழுது ஜிபி முத்து மகன் விஷ்ணுவுக்கு உடம்பு சரியில்லை என்கின்ற தகவல் ஜி பி முத்துவுக்கு சென்றுள்ளது.

இந்த தகவல் அறிந்த ஜிபி முத்து என் பையனை பார்க்க வேண்டும். உடனே என்னை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்புங்கள் என்று அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதது, பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்ற ஒவ்வொரு பார்வையாளரையும் கண் கலங்க வைத்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு ஜி.பி. முத்து வெளியேறினால் பிக் பாஸ் நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் மிகப் பெரும் அளவில் குறைந்து விடுவார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்ற 90 சதவிகித பார்வையாளர்கள் ஜி பி முத்துவுக்காக தான் பார்க்கிறார்கள். இதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு ஜிபி முத்து வெளியேறாமல் இருக்க ஜி பி முத்துவை பிக் பாஸ் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். நீங்கள் மிக கடின போராட்டத்திற்கு பின்பு இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் கேப்டன் நீங்கள். உங்கள் ஊரில் உங்கள் குழந்தை பற்றி விசாரித்ததில், உங்கள் மனைவி எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, நன்றாக இருக்கிறார் என்று சொன்னதாக ஜிபி முத்துவை பிக் பாஸ் சமாதானப்படுத்தினார்.

இருந்தாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் ஜிபி முத்து பிடிவாதம் பிடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஜி.பி முத்து கலந்து கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் பிக் பாஸ் மூலம் ஜிபி முத்துவை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கிய உள்ளனர். ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினால் இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் குறைந்து விடுவார்கள். இதன் பின்பு கமலஹாசன் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் ஓன்று செய்ய முடியாது என்பதை அறிந்த விஜய் டிவி நிர்வாகம் முடிந்த அளவு ஜிபி முத்துவை சமாதானம் படுத்திய வருகின்றனர்.

இந்நிலையில் இனி வரும் காலங்களில் பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் அகம் டிவி வழியாக ஜிபி முத்து மனைவி மற்றும் குழந்தைகளை அவரிடம் பேச வைப்பார்களா.? அல்லத குடும்பத்தை அழைத்து வந்து ஜிபி முத்துவை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வார்களா.? என்பது அடுத்தடுத்து நாட்களில் தெரியும். இருந்தும் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதில் ஜிபி முத்து உறுதியாக இருப்பதால் விரைவில் அவர் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.