அப்பா மகள் ரஜினியை இயக்கும் ஐஸ்வர்யா.. ரஜினி போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் சினிமா துறையில் தங்களை எதோ ஒரு வகையில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதில் இளைய மகள் சௌந்தர்யா கார்ட்டூன் படித்துவிட்டு ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்கின்ற படத்தை இயக்கி தந்தை ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய நஷ்டத்தை பரிசாக கொடுத்தார்.

அதனை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கி அதுவும் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது. இதன் பின்பு தற்காலிகமாக சினிமா துறையில் இருந்து விலகி உள்ளார் இளைய மகள் சௌந்தர்யா. இந்நிலையில் மூத்த மகள் ஐஸ்வர்யா அவருடைய கணவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தை இயக்கினார், இது மிகப்பெரிய நஷ்டத்தை அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுசுக்கு ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து வை ராஜா வை என்கின்ற படத்தை இயக்கி தோல்வியை சந்தித்தார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் தனக்கு இரண்டு படங்கள் இயக்கிய அனுபவம் உள்ளது அதனால் தந்தை ரஜினிகாந்தை வைத்து பட இயக்கும் ஆசையில் பல முறை ரஜினியிடம் தன்னையுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார் மூத்த மகன் ஐஸ்வர்யா.

ஆனால் ரஜினி தொடர்ந்து ஏற்கனவே இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் நடித்து நநஷ்டம் ஏற்பட்டது போதும் என ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க விருப்பமில்லை எனை தெரிவித்துள்ளார். தற்பொழுது நடிகர் அதர்வா நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ள ஐஸ்வர்யா, தந்தையிடம் கேஸ்ட் ரோலாக சில காட்சிகள் நடித்தால் போதும், அது தன்னுடைய படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷன் ஆக இருக்கும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் சில கண்டிஷன்கள் உடன் சம்மதம் தெரிவித்தவர், அதில் அறை நாட்கள் மட்டும்தான் கால்சீட் தர முடியும், அதனால் அதற்குள் என்னுடைய சம்பந்தமான காட்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தான் நடிக்கும் சிறப்பு காட்சி அந்த படத்தில் ஐந்து நிமிடத்திற்கு மேல் இருக்கக் கூடாது என பல கண்டிஷன்களுடன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த் என கூறப்படுகிறது.