சீரியல் சூட்டிங் தான் முக்கியமுன்னு மஹாலக்ஷ்மி போய்ட்டா…கண் கலங்கிய ரவீந்திரன்..

0
Follow on Google News

தயாரிப்பாளர் ரவீந்திரன் கடந்த ஆண்டு நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்களது திருமண செய்தி வெளியானத்தில் இருந்தே சமூக வளைத்தளத்தில் கேலிக்கு உள்ளாகி இருந்தது. ஆனால், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

இருவரும் வெற்றிகரமாக தங்களது முதல் திருமண நாளை கொண்டாடிய நிலையில் மோசடி புகார் ஒன்றில் தயாரிப்பாளர் ரவீந்திரனை போலீசார் கைது செய்தனர். அந்த புகார் உறுதியானதை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் ரவீந்தர் தரப்பில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். கடந்த 14 நாட்களாக சிறையில் உள்ள தனக்கு உடலில் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றது எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து, ரவீந்தர் சந்திரசேகர் இரண்டு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதையும் கண்டு கொள்ளாமல் ரவீந்தர் மனைவி மகாலட்சுமி அவர்கள் சீரியல், போட்டோ சூட், விளம்பரம் என்று பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இதை பார்த்த நடித்துக் பலருமே மகாலட்சுமி கணவர் ரவீந்திரனை கழட்டி விட்டு விட்டார் என விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் ஜாமினில் வெளிவந்துள்ள ரவீந்திரன் மனைவி மகாலட்சுமி பற்றி கூறுகையில். அதாவது போலீஸ் வீட்டிற்கு அதிகாலை வந்ததும் யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. வீட்டை சோதனை செய்ய வேண்டும் என சொல்ல அதை கேட்டதும் மகாலட்சுமி தன்னிடம் ‘அம்மு எல்லாத்தையும் பாத்துக்கோ, எதுனாலும் எனக்கு கால் பண்ணு’ என சொல்லிவிட்டு சீர்யல் சூட்டிங் சென்று விட்டதாக தெரிவித்த ரவீந்திரன்.

இந்த நேரத்திலேயும் அவளால் சீரியல் புரடக்‌ஷனில் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகவே சென்றதாகவும், பின்னர் கைது செய்து புழல் சிறைக்கு அழைத்து சென்ற போது, குபீர் என உடல் எல்லாம் வியர்த்து போய்விட்டது என தெரிவித்த ரவீந்திரன்.

சிறையில் கழிவறையை பார்த்ததும் எப்படிடா இதில் உட்கார்ந்து எழுந்திருக்க போறோம் என குழப்பத்தில் ரவீந்திரன் இருக்க, ஒருவர் ரவீந்திரனை அழைத்து, அங்கே இருந்த ஒரே ஒரு வெஸ்டர்ன் கழிவறையை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார், சிறையில் ரவீந்திரன் இருந்த போது, ஒரு நாள் மகாலட்சும் இவரை பார்க்க வந்துள்ளார். உன்னை பார்க்காமல் ரெம்ப மிஸ் பண்ணுவதாக ரவீந்திரனை பார்த்து உருகியுள்ளார் மஹாலக்ஷ்மி என தெரிவித்த ரவீந்திரன்.

மேலும் அம்மாவுக்கு பிறகு மகாலட்சுமி எனக்கு கிடைத்த வரம், எங்கிட்ட இருந்து மகாலட்சுமியை யாராலும் பிரிக்க முடியாது. என் உடல் மற்றவர்கள் உடல் போல அப்படியெல்லாம் ஈடு கொடுக்காது. எவ்ளோ எடுத்து சொல்லியும் கைது செய்து கொண்டு சென்று விட்டனர் நான் எந்த மோசடியும் செய்யவில்லை. அவருடைய பல திருட்டுத்தனம் மற்றும் தப்பான தொழில் செய்வது பற்றி நான் தெரிந்து கொண்டதும் விலகி விட்டேன்.

அதன் காரணமாகத்தான் என் மீது அபாண்டமான பழியை போட்டு இப்படி என்னை வஞ்சம் தீர்க்க பார்த்து வருகிறார். இனிமேல், அவரை சும்மா விட மாட்டேன். அவருடைய அனைத்து வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றப் போகிறேன் என ஆக்ரோசமாக ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.