ஜோவிகா அப்பா அந்த இருவரும் கிடையது… வனிதா லேட்டஸ்ட் பாஞ்சாலி… பயில்வான் சொன்ன பகீர் தகவல்..

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவும் பங்கேற்றுள்ளார். அம்மாவைப் போலவே, சக போட்டியாளர்களிடம் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பிக்பாஸ் மூலமாக பிரபலாமாகத் தொடங்கியுள்ள ஜோவிகாவை ஏற்கனவே நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்ற நிலையில்,

பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் பிரச்சினை எழுப்பும் வகையில் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், சினிமா பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பற்றி வாய்க்குவந்தவாறு பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். இவரது நக்கலான பேச்சு மற்றும் நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பேசிவருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவ்வாறு தினசரி ஒரு பிரபலத்தை வம்பிழுத்து வரும் பயில்வான் ரங்கநாதன், இப்போது நடிகை வனிதா விஜயகுமார் பற்றி வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். அதாவது, ஜோவிகா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து, நடிகை வனிதா ஜோவிகாவின் சிறுவயது புகைப்படம், பேட்டி, ரீல்ஸ் போன்ற வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு, ஜோவிகாவிற்கு வாக்களிக்குமாறு post போட்டுக் கொண்டிருக்கிறார் வனிதா.

இப்படியான நிலையில், அண்மையில் ஜோவிகா ‘எனக்கு படிப்பு வரல, படிப்பு அவசியமில்லை’ என்று பேசியது பெரும் விவாதத்திற்குள்ளானது. இதைத் தொடர்ந்து ஜோவிகா சிறு வயதில் தமிழ் வாசிக்கும் வீடியோவை வனிதா வெளியிட்டார். மேலும், சில தினங்களுக்கு முன்பு லைவில் வந்த வனிதா, அந்த வீடியோவை ஜோவிகாவின் அப்பாதான் எடுத்தார் என்றும், தன்னுடைய இரண்டு கணவர்களிடமும் தொடர்பில் இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இதைக் கவனித்த பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் வனிதாவை நறுக்கென்று கேள்வி கேட்டுள்ளார். அதாவது, நடிகை வனிதாவை லேட்டஸ்ட் பாஞ்சாலி என்றும், ஜோவிகாவின் உண்மையான அப்பா யார் என்றும் பயில்வான் சரமாரியாப் பேசியுள்ளார். மேலும், பேசிய பயில்வான், ‘ வனிதாவின் அப்பாவான விஜயகுமார் தன்னுடைய இரண்டு மனைவிகளின் கழுத்தில் கை போட்டபடி சிலை ஒன்று செய்து வைத்திருக்கிறார்.

அவர் தனக்கு ரெண்டு பொண்டாட்டி என்பதை உலகறிய செய்தது போல அவருடைய மகள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்.’ என பேசிய பயில்வான். மேலும், வனிதா மகள் ஜோவிகா பிக்பாஸ் வீட்டில் சண்டையின்போது, ‘நான் என்னுடைய அப்பா பேச்சையும் கேட்க மாட்டேன் அம்மா பேச்சையும் கேட்க மாட்டேன். என்னுடைய அம்மாவிற்காக 10 வயதில் போலீஸுடன் நான் சண்டை போட்டேன்’ என்றுஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

மற்றொரு பக்கம் ‘ஜோவிகாவின் அப்பா யார் என்று தெரியுமா? நடிகர் ஆகாஷ் தான் ஜோவிகாவின் அப்பா’ என்று வனிதா சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளார். ஆனால், இது குறித்து வனிதாவின் இரண்டாவது கணவர் கூறும்போது, ‘ஜோவிகா ஆகாஷூக்கும் பிறக்கவில்லை, எனக்கும் பிறக்கவில்லை அது வேறொருவருக்கு பிறந்தது’ என்று விஷயத்தை போட்டுடைத்திருக்கிறார். அப்படியானால், ஜோவிகாவின் உண்மையான அப்பா யார் என்பது வனிதாவிற்கு மட்டும்தான் தெரியும் என்று பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

இப்படி ஒருவரது அந்தரங்கம் பற்றி முழுமையாகத் தெரியாமல் தானாய் ஒன்றை யூகித்து அதுதான் சரி என்று பேசி வரும் பயில்வான் ரங்கநாதனின் பேச்சிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து வனிதா பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.