15 வயது மகனின் தந்தையை இரண்டாவது திருமணம் செய்யும் வரலக்ஷ்மி சரத்குமார்…

0
Follow on Google News

நடிகர் சரத்குமார் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலோ சச்தேவ் என்பவர் உடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மேலும் தற்போது இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கு மருமகனாகவும் வரலட்சுமிக்கு கணவனாகவும் வந்திருக்கும் புது மாப்பிள்ளை யார்?

அவரது பின்னணி என்ன போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் உலவி கொண்டிருக்கும். இப்படியான நிலையில் வரலட்சுமி சரத்குமாரின் வருங்கால கணவர் நிக்கோலை சச்சதேவ் பற்றிய பல்வேறு தகவல்களும் வெளியாகி வருகின்றன. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் வரலட்சுமிக்கு ஹீரோயின் கேரக்டர் வொர்க் அவுட் ஆகாததால், சர்க்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் மிரட்டலான வில்லியாக நடித்து கலக்கிக் கொண்டிருந்தார்.

இவ்வாறு கணக்கு கிடைத்த ஓரிரு பட வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும், சமீபகாலமாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்து வந்தார். இப்படியான நிலையில், “பட வாய்ப்புகள் தான் கிடைக்கவில்லை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிட வேண்டியது தான்” என்று தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்தவரை திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார் வரலட்சுமி.

மேலும் மகளின் விருப்பப்படியே சரத்குமாரும் இருவருக்கும் நெருக்கமான உறவுகளின் மத்தியில் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தத்தை முடித்து வைத்திருக்கிறார். இந்த நிச்சயதார்த்தத்தில் சரத்குமார் ராதிகா ஐயருக்கு நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தனர். வரலட்சுமி நிச்சயதார்த்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ராதிகா மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து வரலட்சுமி நிச்சயதார்த்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் வரலட்சுமி திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை பற்றிய பல பகல் தகவல்கள் வெளியாகி உள்ளது. வரலட்சுமி-ன் மாப்பிள்ளை மும்பையில் art gallery நடத்தி வரும் பிசினஸ்மேன் என்று சொல்லப்படுகிறது.பெரிய பிசினஸ் மேன் என்றாலும் இவருக்கு ஏற்கனவே கவிதா என்பவருடன் திருமணம் ஆகி 15 வயதில் மகள் ஒருவர் இருக்கிறாராம்.

ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இப்படியான நிலையில் திடீரென வரலட்சுமி சரத்குமார் உடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போகவே உடனடியாக வரலட்சுமி சரத்குமார் பெற்றோர் சம்பந்தத்துடன் மாப்பிள்ளையை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.