வாயை கொடுத்து வசமாக சிக்கிய ரோகினி… பொறுமை இழந்து போட்டுடைக்கும் முத்து.. விறுவிறுப்பாக சிறகடிக்க ஆசை..

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. முத்து ஆட்டோ ஓட்டுவதை ரோகினி விஜயாவிடம் போட்டுக் கொடுக்க, அதற்கு விஜயா என் வீட்டு பத்திரத்தை வைத்து தானே கார் வாங்கி கொடுத்தாரு. அப்போ அந்த கார் எனக்கு தானே சொந்தம் என்னிடம் சொல்லாமல் எப்படி அவன் காரை விற்கலாம்.

இதை நான் கேட்டால் சரியா வராது கேட்க வேண்டியவர் கேட்கட்டும் என்று சொல்லி அந்த விஷயத்தை அண்ணாமலையிடம் விஜயா போட்டுக் கொடுக்க அதற்கு அவர் யார் உனக்கு சொன்னது என்று கேட்க பார்வதி சொன்னதாக விஜயா மழுப்புகிறார். பிறகு அண்ணாமலை முத்து வந்ததும் கேட்கிறேன் என்று சொல்லி விடுகிறார். அந்த நேரத்தில் மீனா பூக்கடையில் இருக்கும்போது அங்கு ஒரு பாட்டியை முத்து ஆட்டோவில் கூட்டிக்கொண்டு வந்து விடுகிறார்.

அதை பார்த்ததும் மீனா என்ன இவர் கார் ஓட்டாமல் ஆட்டோ ஓட்டுறாரு என்று கன்பியூஸ் ஆகிறார். பிறகு மீனா வீட்டிற்கு வரும்போது விஜயா மீனாவிடம் உன் புருஷன் என்ன பண்ணுனாலும் உன்கிட்ட சொல்லுவானே கார் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு மீனா எனக்கு தெரியாது என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை முத்து ஆட்டோ ஓட்டுற விஷயம் உனக்கு தெரியுமா? என்று கேட்க, அதற்கு மீனா இல்ல மாமா இப்பதான் தெரியும். இப்போதான் அவர் ஆட்டோ ஓட்டுவதை பார்த்தேன் என்று சொல்கிறார்.

அதற்கு விஜயா கார் ஓட்டிட்டு இருந்தவன் இப்ப தெருத்தெருவா ஆட்டோ ஓட்டுறான் கார் என்ன ஆச்சு என்று கேட்க, அதற்கு மீனா காரையும் தெருவுல தான் ஓட்டுவாங்க கடலில் ஓட்ட முடியாது என்று கவுண்டர் கொடுத்து அவமானப்படுத்துகிறார். பிறகு முத்து வீட்டிற்கு வந்ததும் விஜயா முத்துவிடம் கேள்வி கேட்க அதற்கு ரோகிணி அன்னைக்கி மனோஜ் பொய் சொன்னாருன்னு இவரு டிவில எல்லாம் போட்டு காட்டினாரு. இன்னைக்கு இவர் எதுக்கு இந்த விஷயத்தை வீட்ல மறைச்சாரு? என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு முத்து ஆமா நான் ஆட்டோ தான் ஓட்டுறேன். பார்க்குல படுத்து பொண்டாட்டி கிட்ட ஏமாத்தல என்று முத்து சொல்கிறார். அதற்கு விஜயா கார் வாங்குனது என்னுடைய பணம் அதனால நீ காரை வித்த பணத்தை என்கிட்ட தானே கொடுக்கணும் என்று கேட்க அதற்கு முத்து கொடுத்திடலாம். ஆனால் இவன் 27 லட்ச ரூபா பணத்தை தூக்கிட்டு ஓடுனானே அதை எடுத்து வைத்த அடுத்த நிமிஷம் நான் செட்டில் பண்றேன் என்று சொல்ல மனோஜ் எனக்கு வேலை இருக்கு என்று நைசாக நழுவி விடுகிறார். பிறகு விஜயாவும் இந்த பேச்சை நிறுத்தி அமைதியாகி விடுகிறார்.

அப்போது அண்ணாமலை கார் என்ன ஆச்சு ஏன் விற்ற என்று கேட்க அதற்கு முத்து கொஞ்சம் அவசர தேவைப்பா அதனால வித்துட்டேன். கண்டிப்பா அந்த பணத்தை அம்மாகிட்ட கொடுக்கிறேன். நீயே உடம்பு முடியாம இருக்க அதனால் தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். அதுக்கான காரணம் என்ன என்பது இப்போ சொல்ல முடியாது. ஆனா கண்டிப்பா உன்னிடம் சொல்லுவேன் என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பி விடுகிறார்.

அடுத்ததாக மீனா கிச்சனில் இருக்க முத்து தண்ணீர் குடிக்க வரும்போது மீனா காரைப் பற்றி கேட்க வர முத்து மீனா கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம் கேட்டதும் மீனா கோபப்படுகிறார். அப்படியே பேசிக் கொண்டிருக்கும் போது முத்து சத்யாவை பற்றி பேச, அதற்கு மீனா இப்போ எதற்கு சத்யாவை பற்றி பேசுறீங்க என்று கேட்டு கோபப்படுகிறார். அதற்கு முத்து நீங்க பொண்ணு வெளியே போயிட்டு வரதுக்கு லேட்டானா மட்டும் கேள்வி கேக்குறீங்க, ஆனா ஒரு ஆம்பள எங்க போறான்னு கேள்வி கேட்க மாட்டேங்கறீங்க என்று திட்டிவிட்டு போய் விடுகிறார். இதனால் மீனா குழப்பத்தில் இருக்கிறார்.

இதனை அடுத்து ரோகிணி குறித்தும் சாடைமாடையாக முத்து சில விஷயங்களை பேசினாலும் முக்கியமான ஒன்றைக் கேட்க மறந்துவிட்டதாக பார்வையாளர்கள் இந்த சீரியல் குழுவினருக்கு ஞாபகப்படுத்தி உள்ளனர். என்னுடைய காரை விற்றதை மட்டும் வீட்டில் வந்து போட்டு கொடுத்தாயே, நீ உன்னுடைய பார்லர் விற்றுவிட்டு, அதே பார்லரில் சம்பளத்துக்கு தானே வேலை செய்கிறாய்? அதை ஏன் வீட்டில் சொல்லவில்லை? பார்லரை விற்ற காசை ஏன் வீட்டில் கொடுக்கவில்லை? என்று கேள்வியை முத்து கேட்டிருக்கலாம் என்றும் இந்த கேள்வியை அவர் கேட்க இது சரியான நேரம் என்றும் ஆனால் முத்து கேட்காது ஏன் என்று தெரியவில்லை என்றும் இந்த சீரியலை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.