விஜய்யை சீண்டிய தமன்னா.. ரவுண்டு கட்டும் விஜய் ரசிகர்கள்…

0
Follow on Google News

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் யார் என்ற மிகப்பெரிய ஒரு பஞ்சாயத்து சென்று கொண்டு தான் இருக்கிறது. தற்போது அந்த பஞ்சாயத்து மிகப் பெரியதாக வெடித்துள்ளது. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து விஜயை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசிய கருத்துக்கள் விஜய் ரசிகர்களை பெறும் கோவத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த விழாவில் பேசிய ரஜினி ‘காட்டில் பெரிய மிருகங்கள் எப்பவும் சின்ன மிருகங்களை தொல்லை செய்து கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, காகம் எப்பவும் கழுகை சீண்டிக்கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்பவும் அமைதியாக தான் இருக்கும்.

கழுகு பறக்கும் போது தான் அதை பார்த்து காக்கவும் உயரமா பறக்க நினைக்கும். ஆனால், காக்காவால் அது முடியாது.கழுகு தன்னுடைய இறக்கையை கூட்டி ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்துக்கு பறந்து போய்விடும்’ என்று பேசி இருந்தார். அதுமட்டுமில்லாமல் அவர் பீஸ்ட் படம் குறித்தும் பேசி இருந்தார். அதில் அவர் கூறியதாவது,

நிறைய பேர் பீஸ்ட் தோல்வி அடைந்ததால் நெல்சனுக்கு படம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார்கள், ஆனால் எப்போதுமே ஒரு இயக்குனர் தோற்பதில்லை, அவர் எடுக்கும் சப்ஜெக்ட் தான் தோற்கிறது என்று கூறி இருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்றனர். இதெல்லாம் போதாது என்று தற்போது தமன்னா விஜய் ரசிகர்களை சீண்டியுள்ளார்.

நீண்ட நாட்களாக பெரிதாக எந்த ஒரு படமும் நடிக்காத தமன்னா, தற்போது காவலா என்ற ஒரே பாடலின் மூலம் ஓகோ என்று வந்துவிட்டார். இந்நிலையில் அவர் ஒரு இன்டர்வியூவில் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் சுறா படத்தினை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, சுறா படத்தில் நடித்ததுதான் நான் செய்த பெரிய தவறு. அந்தப் படம் கண்டிப்பா ஃப்ளாப் ஆகும் என்று எனது உள் உணர்வு அப்போதே சொன்னது.

ஆனால் வேறு வழியில்லாமல் நடித்துக்கொடுத்தேன். ஒரு படத்தில் கமிட்டாகிவிட்டால் அதை முடித்துக்கொடுக்க வேண்டியது நடிகர்களின் கடமை என்பதை நான் அறிவேன். அதனால்தான் நடித்துக் கொடுத்தேன் என்று பேசிள்ளார்.‌ சுறா விஜய்யின் ஐம்பதாவது படமாகும். அப்பொழுது தமன்னா பெரிய அளவில் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை. அப்போது அவருக்கு கிடைத்த பெரிய ஹீரோ படம் தான் சுறா. இந்நிலையில் தமன்னா இவ்வாறு பேசியது விஜய் ரசிகர்களை செம்ம காண்டாக்கி உள்ளது. சுறா விஜய் கேரியரிலேயே மோசமான தோல்வி படம் என்பது குறிப்பிடதக்கது.