இதுக்கெல்லாம் காரணம் ரஜினி தான்.. ரஜினி காலில் விழுந்த எஸ்.ஏ .சந்திரசேகர்..

0
Follow on Google News

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக நடிகர் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையிலான சண்டை இன்று மிகப்பெரிய உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வெளியான பாடல் வரிகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சுகள். ஏற்கனவே பற்றி எரிந்து கொண்டிருக்கிற நெருப்பில் மேலும் பற்ற வைத்தது போன்று அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், அப்போது பெரும் கூட்டம் அங்கு திரளாக திரண்டு அனைவரும் ரஜினியை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, அங்கிருந்த நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ரஜினியின் காலில் விழுந்து விட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரஜினி சிறிது நேரம் பதறி போய், விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரை கையைப் பிடித்து தூக்கினார். இந்த நிலையில் எஸ்.ஏ சந்திரசேகர் திடீரென நடிகர் ரஜினிகாந்தின் காலில் விழுந்து மரியாதை செலுத்தும் அளவிற்கு ரஜினிகாந்த் மீது அப்படி என்ன எஸ் ஏ சந்திரசேகருக்கு மதிப்பும் மரியாதையும் கூடியிருக்கும், என்கின்ற பல சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,

சினிமா துறையைச் சார்ந்த பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து நேரடியாகவே எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டதாகவும், அதற்கு நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய ஆன்மீக குரு என்று சொன்ன எஸ் ஏ சந்திரசேகர், தன்னிடம் ஆன்மீகம் சார்ந்த பல கோவில்கள் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்ததாகவும், இன்று ஓரளவு நான் ஆன்மீகத்தை நோக்கி பயணம் மேற்கொள்வதற்கு ஒரு வகையில் ரஜினிகாந்தும் காரணம் தான் என அந்த பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த எஸ்ஏ சந்திரசேகர்.

மேலும் ஒரு காலத்தில் தான் படு பயங்கர கோபம் கொண்டவனாக இருந்தபோது அந்த கோபத்தினால் பல விளைவுகளை என்னால் சந்திக்க நேரிட்டது. இந்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் முயற்சி செய்தபோது, இந்த கோபத்தை குறைப்பது எப்படி என சில அறிவுரைகளை நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வழங்கியதாகவும், மேலும் தியானம் செய்வது க பற்றியும் தனக்கு கற்றுக் கொடுத்தவர் ரஜினிகாந்த் என தெரிவித்த எஸ்.ஏ. சந்திரசேகர்.

அந்த வகையில் என்னுடைய ஆன்மீக குருவாக நினைத்து தான் நடிகர் ரஜினிகாந்த் காலில் விழுந்தேன் என்று அந்த பத்திரிகையாளிடம் எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்ததாக, அந்த பத்திரிகையாளர் ஒரு பேட்டி ஒன்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் எஸ்.ஏ சந்திரசேகருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் இடையில் இருக்கும்இந்த உறவைப் பற்றி விஜய் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காரணம் சமீபாலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சையில் விஜய் ரசிகர்கள் ரஜினிகாந்தை மிக இழிவாகவும் கீழ்தரமாகவும் விமர்சனம் செய்து வருவது பார்க்க முடிகிறது. நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி என்றாலும் கூட அவர் ஒரு முற்றும் துறந்த முனிவர் அல்ல, அனைவருக்கும் இருக்கும் ஆச பாசங்கள் அவருக்கும் இருக்கும்.

தன்னுடைய மகுடமாக கருதக்கூடிய சூப்பர் ஸ்டார் என்கின்ற பட்டத்தை மிக எளிதாக விஜய் தட்டி செல்வது போன்ற பேச்சு நிச்சயம் ரஜினிக்கு கோபம் வரும் , ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா மேடையிலே ரஜினிகாந்த் வெளிப்படுத்தி இருக்கிறார், இருந்தாலும் அதை கோபத்துடன் வெளிப்படுத்தாமல் மேன்மக்கள் மேன்மக்கள் என்பது போன்று, மிக பக்குவமாக பேசி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதை புரிந்து கொண்டு இனிமேலாவது ரஜினியை விமர்சனம் செய்வதை விஜய் ரசிகர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி வருகின்றனர் சினிமா துறையை சேர்ந்தவர்கள்.