தமன்னாவால் கடுப்பாகி ரஜினி போட்ட கண்டிஷன்… முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்..

0
Follow on Google News

சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், வழக்கம் போல் குட்டி கதை சொல்லி, சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு மறைமுகமாகமாக விஜயை தாக்கி பேசியிருந்தார், ரஜினியின் இந்த பேச்சுக்கு பின்பு ரஜினி ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு இடையில் உச்சக்கட்ட மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் சொன்ன பருந்து, காக்கா கதையில் ரஜினி பருந்து, விஜய் காக்கா என குறிப்பிட்டு தான் ரஜினி பேசியுள்ளார் என கூறப்படும் நிலையில் தொடர்ந்து ரஜினியை சீண்டும் விதமாக விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் பழம்பெரும் பருந்து பதட்டப்பட்ட கதை என்கிற ஒரு தலைப்பில் குட்டி கதை ஒன்றை வெளியிட்டு ரஜினியை பங்கம் செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள குட்டி கதையில், ஒரு ஊரில் ஒரு பழம்பெரும் பருந்து இருந்ததாம். அதனிடம் ‘மிருகம்’ இயக்குனர் Paddy Suriyan.. ஒரு கதை சொன்னாராம். இவரது ‘மருத்துவர்’ ஹிட்டானதால்.. உடனே ஓகே சொன்னதாம் முந்தைய வேட்டைகளில் தோல்வியடைந்த பருந்து. உங்கள் இளமைக்கால பருந்து கேரக்டரில் எனது நண்பர் CSK நடித்தால் நன்றாக இருக்கும். அவர் உங்கள் தீவிர ரசிகரும் கூட’ என கூறினாராம் Paddy Suriyan. ‘வேணாம். படம் ஹிட்டானால் அவரால்தான் ஓடியது என்று அனைவரும் சொல்வார்கள்’ என்று நோ சொல்லிவிட்டதாம் பருந்து.

முந்தைய படங்களை போல தமிழில் மட்டும் எடுத்தால் சக ஸ்டார்களின் கலக்சனை தொட இயலாது என்பதால் பான் இந்தியா படமாக மாற்ற முடிவு செய்தனராம். ஆனால் ஃபார்மில் இருக்கும் சஞ்சய் தத், விஜய் சேதுபதி, ஃபஹத் பாஸில் உள்ளிட்ட எவரும் வேண்டாம் என்றதாம் பருந்து. காரணம்: படம் ஹிட்டானால் அவரால்தான் ஓடியது என்று அனைவரும் சொல்வார்கள். பிறகு என் கெத்து என்னாவது?’

ஆகவே சக பழம் பருந்துகளான ஜாக்கி, சிவராஜ் ஆகியோரை ஆட்டத்தில் சேர்த்துள்ளதாம். இதற்கு முன்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரியளவில் பரிச்சயம் ஆகாத நானா படேகர், சுனில் ஷெட்டி ஆகியோரை வில்லனாக சேர்த்தது ஊரறிந்ததே. நடிகைகளில் தற்போது ட்ரெண்டில் உள்ள ராஷ்மிகா, சமந்தாவை தேர்வு செய்யலாமா?’ என்றதற்கு ‘வேண்டாம். நீலாம்பரியும், சுறா நாயகியுமே போதும்’ என்றதாம் பருந்து. காரணம்: அதேதான்.

ஆனால் எதிர்பாராத திருப்பமாக சுறா நாயகி ஆடிய பாடல் சூப்பர் ஹிட்டாகி, இவர் பஞ்ச் வைத்து பாடியதாக வரும் இரு பாடல்களும் கண்டுகொள்ளப்படாமல் போனதால் கடும் கடுப்பானதாம் பருந்து. ஆகவே ட்ரைலரில் ஒரு இடத்தில் கூட சுறா நாயகியின் முகம் தெரியக்கூடாது என்று கட்டளை போட்டு விட்டதாம் பருந்து. காரணம்: அதேதான்.

ஒரு காலத்தில் வில்லன், நாயகி, துணை நடிகர்கள் என அனைவரும் ஸ்கோர் செய்ய வாய்ப்பு அளித்ததால் மட்டுமே பருந்தின் படங்கள் வெற்றியடைந்தன. அப்போது பகிர்ந்து வாழும் காக்கை குணம் பருந்திற்கு இருந்தது. ஆனால் இன்று ‘இங்க எல்லாமே நான்தான். நான் மட்டும்தான்’ என தனியே வானில் சுற்றித்திரிய முடிவெடுத்துள்ளது அப்பருந்து. என தெரிவித்துள்ள ப்ளூ சட்டை மாறன்.

மேலும் ஊருக்கு உபதேசம். பார்ல சகவாசம்:என்கிற தலைப்பில் மற்றொரு குட்டி கதை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில்,’தயவு செஞ்சி கேட்டுக்கறேன். யாரும் சரக்கு அடிக்க வேண்டாம்’ என்று சமீப காலமாக அறிவுரை சொல்லி வருகிறது பவ்யமான பருந்து. ஆனால் நிஜத்தில்… பருந்து செய்திருக்கும் செயலென்ன தெரியுமா? தலைநகரில் உள்ள நுங்குபாக்கம் பகுதியில் உள்ள பிரபல ‘பனை தோப்பு’ ஹோட்டலுக்கு அருகே பருந்திற்கு சொந்தமாக ஒரு ஹோட்டல் இருந்தது. அதற்கு 97 இல் வெளியான தனது படத்தின் பெயரை சூட்டியிருந்தது பருந்து.

தற்போது அதை மெயின்டெயின் செய்ய இயலாத காரணத்தால் இன்னொரு க்ரூப்பிற்கு கைமாற்றி உள்ளது. அங்கே தற்போது இருப்பது நூலகமோ, இலவச மருத்துவமனையோ இல்லை. பல மதுப்பிரியர்கள் வந்து செல்லும் Bar என்பதுதான் ஹைலைட். ஊருக்கு உபதேசம். ஆனால் தன் இடத்தில் பாருக்கு அனுமதி. பார்த்தீர்களா பருந்தின் இரட்டை வேடத்தை என ரஜினிக்கு பருந்து என பெயரிட்டு குட்டி கதைகளை வெளியிட்டு வெச்சு செய்கிறார் ப்ளூ சட்டை மாறன்.