எதிர் நீச்சல் மாரிமுத்து மீது போலீஸ் புகார்.. பெரும் சிக்கலில் எதிர்நீச்சல் சீரியல்…

0
Follow on Google News

கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் மாரிமுத்து. இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பைப் பெற்றன. அதனையடுத்து மிஷ்கினின் வற்புறுத்தலின்பேரில் யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார். யுத்தம் செய் படத்துக்கு பிறகு வரிசையாக பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் மாரிமுத்து. சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

குறிப்பாக ஜெயிலர், இந்தியன் 2 படங்களில் இவர் நடித்து வருகிறார். இருப்பினும் மக்கள் அனைவருக்கும் இவரை எதிர்நீச்சல் ஏ ஜி குணசேகரனாகத்தான் நன்றாக தெரியும். “ஏய் இந்தாம்மா” என்று எதார்த்தமாக பேசும் இவரின் நடிப்பிற்காகவே பலர் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். அதிலும் சமீபத்தில் இவர் மிகவும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

இவர் எதிர்நீச்சல் சீரியலில் பேசும் வசனங்கள் அனைத்தும் மீம்ஸ்ளாக வந்து கொண்டே உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் நவீன பரிகாரங்கள் சொல்லும் ஜோதிடர்கள் VS அதை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாரிமுத்து கலந்து கொண்டிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் ஜோதிடர்களை வச்சி செய்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார் மாரிமுத்து. இதற்கெல்லாம் இவருக்கு ஒரு ஆப்பு வந்து விழுந்துள்ளது. இவரின் பேச்சால் கடுப்பான ஜோதிடர்கள் இவரின் மேல் போலீசில் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு மாரிமுத்து என்ன பேசினார் என்ற வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங்கிலும் இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “நான் இதையெல்லாம் நம்ப மாட்டேன் இந்த நாடு நாசமா போறதுக்கு காரணம் ஜோதிடர்களும் ஜோதிடத்தை நம்புபவர்களும் தான் என்று கூறியிருந்தார். அதோடு தற்போதைய முதலமைச்சர் ஆக மாட்டார் என்று பல ஜோதிடர்கள் சொன்னார்கள். ஆனால் அவர் ஆகிவிட்டார். இப்போ அந்த ஜோதிடர்கள் மூஞ்சியை எங்க கொண்டு வச்சிருக்காங்க.

அதோடு கொரோனா வரும் என்றோ, சுனாமி வரும் என்றோ எந்த ஜோதிடனும் சொல்லவில்லையே வந்த பிறகு தான் எல்லாரும் சொல்றாங்க” என தாறுமாறாக பேசியிருந்தார். இதனால் ஜோடிதர்களுக்கும் மாரிமுத்துவுக்கும் இடையே அனல் பறக்கும் விவாதம் நடந்தது. இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு காவல் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் ஒன்றாக இணைந்து மாரிமுத்துவின் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. பின் ஜோதிடர்களின் புகார்களை வாங்கிக் கொண்ட உயர் அதிகாரி மாரிமுத்துவின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருக்கிறார்.
தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டிருக்கிறது.

காரணம், எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்துவால் தான் ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர் சில நாட்கள் சீரியலில் நடிக்க முடியாமல் போய்விடும். இதனால் சீரியலுக்கு பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.