திருமணம் முடிந்தாலும் ஹானிமூன் கிடையாது… நயன்தாராவுக்கு ஆறு மாத சிகிச்சை… என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சிம்பு, பிரபு தேவா இருவரையும் காதலித்த நயன்தாரா இரண்டும் காதலும் தோல்வி அடைந்த பின்பு மீண்டும் சினிமாவில் ரீ – என்ட்ரி கொடுத்தார். நயன்தாரா ரீ-என்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிந்தது. நயன்தாரா சம்பளமும் கிடு கிடுவென உயர்த்து டாப் ஒன் நடிகையானார் நயன்தாரா.

40 வயதை நெருங்கும் நயன்தாரா திருமணம் எப்போது என்கிற பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில், விரைவில் பாண்டிச்சேரியில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற இருக்கிறது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில முக்கிய சினிமா பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏழு வருடமாக காதலித்து வரும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வருகின்றனர். மேலும் நயன்தாரா எங்கே சென்றாலும் கூடவே விக்னேஷ் சிவனும் ஜோடியாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் அவரது தோற்றம் முதிர்கன்னி போன்று காட்சியளித்தது. இதனால் நயன்தாராவுக்கு புதிய பட வாய்ப்புகள் குறைய தொடக்கியது.

நயன்தாரா முதிர்கன்னி போன்று காட்சியளிக்க காரணம், நயன்தாரா உடல் இடையை குறைக்க மேற்கொண்ட சிகிச்சை தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் தற்பொழுது அவரால் மாடர்ன் டிரஸ் அணிய முடியவில்லை, சேலையில் தான் தோன்றுகிறார். மேலும் திருமணத்துக்கு முன்பே பல முறை கருத்தடை மாத்திரையை நயன்தாரா பயன்படுத்தி வந்ததால், அவரது கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் நயன்தாரா திருமணத்துக்கு பின்பு குழந்தை பெற்று கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் முடிந்த நயன்தாரா,கேரளாவில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது, ஆறு மாதம் அங்கே தங்கி சிகிச்சை பெற இருக்கும் நயன்தாரா. சிகிச்சை முடித்த பின்பு அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பிரச்சனை சரி செய்யப்பட்டு குழந்தை பெற்றெடுக்கும் வகையில் அவரது கர்ப்பப்பை பிரச்சனை தீர்க்கப்படும் என்றும்,

அதனால், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பின்பு ஹானிமூன் கிடையாது என்று கூறப்படுகிறது. கேரளாவில் நயன்தாரா தங்கி சுமார் ஆறு மாதம் சிகிச்சை பெரும் காலங்களில் குடும்பத்தினர் யாரும் அங்கே தங்க அனுமதியில்லை என்றும், ஆனால் நயன்தாராவை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். இதனால் விக்னேஷ் சிவனுக்கு சிறிதும் வருத்தம் இல்லை, நயன்தாராவை திருமணம் செய்தால் போதும் என்கிற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

அண்ணே….மன்னிச்சுடுங்க…. பாலாவிடம் சரண்டரான சூர்யா..! இருவருக்கும் இடையில் நடந்தது என்ன தெரியுமா.?