ஷங்கரின் பித்தலாட்டத்தை தோலுரித்த லெஜெண்ட் சரவணா… என்ன பித்தலாட்டம் தெரியுமா.?

0
Follow on Google News

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணா, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அண்ணாச்சியை கையில் பிடிக்க முடியாது என்று சொல்வது போன்று, சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களில் முன்னணி நடிகைகளுடன் அவர் போடும் ஆட்டம் அணைத்து தொலைக்காட்சிகளிலும் விளம்பரமாக ஒளிபரப்பப்படும். இப்படி தன்னுடைய கடையின் விளம்பர படத்தின் மூலம் பிரபலமானவர் லெஜெண்ட் சரவணா.

இவருடைய விளம்பர படங்கள் அதிகம் கேலி கிண்டலுக்கு உள்ளானது. அப்படி கிண்டலாக ட்ரோல் செய்த்தவர்கள் அண்ணாச்சி ஏன் சினிமாவில் நடிக்க கூடாது என கிண்டல் செய்த்தவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். பல நாட்களாக லெஜெண்ட் சரவணாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்து வந்துள்ளது, அதனால் தான் சினிமாவில் நடிக்க முடியவில்லை என்றாலும் முன்னனி நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுத்து விளம்பர படத்தில் நடித்தார்.

சரவணா ஸ்டோர் விளம்பர படங்களை ஜே.டி – ஜெர்ரி இருவரும் விளம்பர பட இயக்குனராக பணியாற்றினார்கள், அவர்கள் இயக்கத்தில் லெஜெண்ட் என்கிற படத்தில் லெஜெண் சரவணா விஞானியாக நடிக்கிறார் , இதில் நடிகர் நாசர், விஜயகுமார் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ நிகழ்ச்சி சமீபத்தில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் சினிமா துறை ஆச்சரிய படும் விதத்தில் ஸ்டேடியம் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. சரவணா ஸ்டோர் சப்ளையர் அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது, இதனை தொடர்ந்து நம்மை வாழ வைக்கும் அண்ணாச்சி நடிக்கும் படம் என்பதால் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டதாக கூறப்டுகிறது. இந்த படத்தில் அண்ணாச்சி வாய்ஸ் சரியில்லை என்று டப்பிங் வாய்ஸ் கொடுக்க ஏற்பாடு நடந்துள்ளது, ஆனால் அண்ணாச்சி வேண்டாம் சொந்த குரலில் தான் பேசுவேன் என்று சொல்லிவிட்டார்.

தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்றால் அது ஷங்கர் தான் என பேசப்பட்டு வந்தது. மேலும் ஷங்கர் படங்களில் இடம்பெறும் பாடல்கள் அதிக செலவில் வியப்பூட்டும் வகையில் பிரமாண்டமாக இருக்கும். இப்படி இது ஷங்கர் மட்டுமே எடுக்க முடியும் என்பதில்லை.பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் அப்படி படம் எடுக்கலாம் என லெஜெண்ட் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் பல காட்சிகள் வியப்பூட்டும் வகையில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியான பின்பு ஷங்கர் என்கிற பிரமாண்ட பிம்பத்தை உடைத்து எறிந்து, பணம் இருந்தால் ஷங்கர் மட்டுமில்லை யார் வேடுமானாலும் வியப்பூட்டும் வகையில் பிரமாண்டமாக படம் எடுக்கலாம் என ஷங்கரை இதுவரை தன்னால் மட்டுமே முடியும் என்கிற பித்தலாட்டத்தை தோலுரித்து காட்டும் வகையில் லெஜெண்ட் படம் இருக்கும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

அண்ணே….மன்னிச்சுடுங்க…. பாலாவிடம் சரண்டரான சூர்யா..! இருவருக்கும் இடையில் நடந்தது என்ன தெரியுமா.?