பந்தா செய்யும் தமிழ் நடிகைகளுக்கு தரமான சம்பவம் செய்த கங்கனா ரனவ்த்.. வியப்பில் தமிழ் திரையுலகம்..

0
Follow on Google News

பாலிவுட் நடிகை கங்கனா ரனவ்த் மீது பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் அரசியல் ரீதியாக உண்டு. இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் அவருக்கான மார்க்கெட் எந்த விதத்திலும் குறையவில்லை, இந்திய அளவில் உச்சத்தில் இருந்து வரும் கங்கனா ரனவ்தை சந்தித்து வேறு ஒரு இந்தி படத்தின் கதையை பி. வாசு ஆரம்பத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தக் கதையில் திருப்தி அடையாத கங்கனா ரனவ்த், தற்போது நீங்க வேறு என்ன படம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கங்கனா ரனவ்த் கேட்க, அதற்கு சந்திரமுகி 2 படத்தை எடுப்பதற்கான முயற்சியில் இறங்கி கொண்டிருக்கிறேன், என பி.வாசு தெரிவித்துள்ளார். சந்திரமுகி 2 கதையை கேட்ட கங்கனா ரனவ்த். இந்தப் படத்தில் சந்திரமுகியாக நானே நடிக்கிறேன் என்று வற்புறுத்தி இந்த படத்தில் இடம்பெற்றார்.

படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடைபெற்று வருகிறது, நடிகை கங்கனா ரனவ்த்க்கு அதிக அச்சுறுத்தல் காரணமாக அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு வழங்கியுள்ளது. அந்த வகையில் படப்பிடிப்புத் தளத்தில் கங்கனா ரனவ்த் தன்னுடைய இசட் பிரிவு பாதுகாப்பு படை சூழ வருவது அங்கே படப்பிடிப்பிற்கு மிகப்பெரிய இடையூறாக இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கங்கனா ரனவ்த் தானாகவே முன்வந்து தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளிடம், எனக்கு கேரவன் வரை பாதுகாப்பிற்கு நீங்கள் வந்தால் போதும். மேலும் குறிப்பாக படப்பிடிப்பு செட்டுக்குள் நீங்கள் யாரும் வர வேண்டாம், அது படப்பிடிப்பில் வேலை செய்பவருக்கு ரொம்ப டிஸ்டர்ப் ஆக இருக்கிறது என்று கேட்டுக் கொண்டதின் பேரில் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் படப்பிடிப்பு தளத்தின் உள்ளே வருவதில்லை.

சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனவ்த் நடிக்கும் ஒவ்வொரு காட்சியையும் அதிகமாக ரிகர்சல் எடுத்த பின்பே நடித்து வருகிறார். அந்த வகையில் சந்திரமுகி 2 படத்தில் முக்கியமான காட்சியாக கருதப்படுவது அதில் சந்திரமுகி நடனமாடும் காட்சிக்காக நடன இயக்குனர் கலா மாஸ்டர், சுமார் மூன்று நாட்கள் கங்கனா ரனவ்த்க்கு நடனம் சொல்லி தந்துள்ளார். மூன்று நாட்கள் பயிற்சியை மேற்கொண்ட கங்கனா ரனவ்த், தான் நடனம் ஆடுவது அவருக்கே திருப்தி இல்லை.

காலா மாஸ்டர் மூன்று நாள் மட்டுமே கால் சீட் கொடுத்திருந்த நிலையில் மீண்டும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று, வேறு ஒரு டான்சரை அழைத்து கலா மாஸ்டர் தனக்கு கற்றுக் கொடுத்த நடனத்தை சரியாக ஆடுகிறேனா என்று மீண்டும் மீண்டும் அந்த காட்சியில் நடிப்பதற்கு முன்பு தொடர்ந்து ரிகர்சல் ஈடுபட்டு வருகிறார் கங்கனா ரனவ்த்.

இந்நிலையில் பாலிவுட்டில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் கங்கனா ரனவ்த் தொழில் மீது உள்ள அக்கறையை பார்த்து அங்கே படப்பிடிப்பில் இருக்கும் தமிழ் திரையுலகையைச் சேர்ந்தவர்கள் வியப்பில் உள்ளார்கள். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு நான் ரிகர்சல் செய்ய மாட்டேன், படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது என்று பந்தா செய்யும் தமிழ் நடிகைகளுக்கு கங்கனா ரனவ்த் அந்த தொழில் பற்று தரமான சம்பவமாக அமைந்துள்ளது என்கின்றனர் கங்கனா ரனவ்த் நடவடிக்கைகளை பார்த்த தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்கள்.