கங்கனா ராணத் அட்டூழியம் தாங்க முடியல… இதெல்லாம் அவருக்கே டூ மச்சா இல்லையா.?

0
Follow on Google News

சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் கூட சத்தம் இல்லாமல் வந்து நடித்து கொடுத்து விட்டு சென்று விடுவார்கள். ஆனால் ஒரு சில முன்னணி நடிகைகள் செய்யும் அட்ராசிட்டி, ஐயோ… எப்படா இந்த படத்தை எடுத்து முடிப்போம் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள், அந்த படத்தின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2, படத்தில் கங்கானா ரானத் ராணி வேடத்தில் நடிக்கின்றார், இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிப்பதற்காக பி வாசு நீண்ட நாட்கள் காத்திருந்தார்.

ஆனால் ரஜினிகாந்திடம் கால் சீட் கிடைக்காததால் தற்போது ராகவா லாரன்ஸ் வைத்து இயக்கி வருகிறார் பி வாசு, இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து வந்துள்ள நடிகை கங்கா அவருடன் சுமார் 30 நபர்களை அழைத்து வந்துள்ளார். பொதுவாக ஒரு நடிகை தன்னுடன் மேக்கப் மேன் மற்றும் காஸ்ட்யூமர் டிசைன் ஆகியோரை தான் உடன் அழைத்து வருவார்கள்.

ஆனால் கங்கனா ராணத் அவருக்கென தனி சமையல்காரர் முதல் மும்பையில் இருந்து அழைத்து வந்துள்ளார். மேலும் பெரும்பாலும் ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெறும் படப்பிடிப்பின் போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு, அங்கே ராமோஜி சிட்டியிலே இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்கி விடுவார்கள்.

ஆனால் கங்கனா தன்னுடன் அழைத்து வந்த சுமார் 30 நபர்களை அந்த ராமோஜி சிட்டியில் உள்ள ஓட்டலில் தங்க வைத்து விட்டு, இவருக்கென தனியாக ஹைதராபாத் நகரில் நட்சத்திர ஓட்டல் வேண்டும் என்று அங்கே தங்கி வருகிறார், மேலும் அவர் மும்பையில் இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் வருவதற்கு தனி விமானதில் வருகிறார். இது அனைத்துமே முழுக்க முழுக்க தயாரிப்பாளர்கள் செலவில் தான் அடங்குகிறது.

இதுபோன்ற கங்கானா அட்ராசிட்டியால், இந்த படத்தை விரைவில் எடுத்து முடித்து விட வேண்டும் என்கின்ற மன நிலையில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதே போன்று இந்தி நடிகர் சஞ்சய்தத் அவர் நடிக்கும் படத்தில் இரவு நேர படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன் என்று தெரிவிக்கின்றவர். மேலும் கங்கனா போன்று தன்னுடன் சுமார் 25 முதல் 30 நபர்களை உடன் சஞ்சய் தத் அழைத்து வருவதாக கூறப்படுகிறது.