தனுஷுக்கு வாழ்வு கொடுத்த சாய்பல்லவி… அப்படியானால் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைவது..!

0
Follow on Google News

நடிகர் தனுஷ் கடந்த ஜனவரி மாதம் நள்ளிரவில் அவரும், அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் ஒருமனதாக பிரிகிறோம் என்று ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு சுமார் 17 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரிவதாக அறிவித்தார். நடிகர் தனுஷ் இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே தனுஷ் வெளியிட்ட அதே அறிக்கையை ஐஸ்வர்யா வெளியிட்டு தங்கள் பிரிவை உறுதி செய்தார்.

இருவரும் பிரிந்த பின்பு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்கள். ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்தார், அதற்கான கதைகளை தயார் செய்து தொடர்ந்து பல நடிகர்களிடம் கால் சீட் கேட்டு வந்தார், ஆனால் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் தயங்கி வந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் புதிய பட பூஜை முடிந்துள்ளது.

விரைவில் ஐஸ்வர்யா இயக்கம் புதிய படத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மறுபக்கம் நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் நுழைந்தவர் வாத்தி என்கின்ற படத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழியிலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கமலாயா இயக்கத்தில் புதிய படத்தில் கமிடாகியுள்ளார் தனுஷ்.

இந்த படத்திற்கான பூஜையும் நடைபெற்று முடிந்துள்ளது, அதனை தொடர்ந்து மற்றும் ஒரு தெலுங்கு படத்தில் கமிட்டாகியுள்ளார் நடிகர் தனுஷ் . தொடர்ந்து தெலுங்கு படங்களில் தனுஷ் கமிடாகி வருவது குறித்து விசாரித்ததில், அதன் பின்னணியில் நடிகை சாய் பல்லவி இருந்து வருவதாக தகவல் வெளியாகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சாய் பல்லவி, இந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

சாய்பல்லவிக்கு தமிழக மக்கள் மத்தியில் பெயரும், புகழும் வாங்கி கொடுத்த பாடல் ரவுடி பேபி. மாரி 2 படத்தில் இருந்து தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவருக்குமே நெருக்கமான நட்பு இருந்து வந்துள்ளது. தற்பொழுது தெலுங்கு படத்தில் செம பிஸியாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. பல தெலுங்கு பட இயக்குனர்களிடம் சிபாரிசு செய்து தனுசுக்கு தெலுங்கு பட வாய்ப்புகளை பெற்று தந்து வருகிறார் சாய் பல்லவி.

சாய் பல்லவி தெலுங்கு நடிகர் ராணா நடிப்பில் வெளியான விரத்த பருவம் என்கின்ற தெலுங்கு பட இயக்குனர் அடுத்து அவர் இயக்கம் தெலுங்கு படத்திற்கு சாய் பல்லவி சிபாரிசில் தனுஷ் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படி தொடர்ந்து பல தெலுங்கு பட இயக்குனர்களிடம் சிபாரிசு செய்து தனுசுக்கு தெலுங்கு பட வாய்ப்புகளை பெற்றுத் தந்து வருகிறார் சாய் பல்லவி.

இதனால் தெலுங்கு படத்தில் ஒரு ரவுண்டு தனுஷ்க்கு வாழ்வு கொடுத்துள்ளார் சாய் பல்லவி. மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் சமரசமாகி மீண்டும் இருவரும் இணைவார்கள் என்கின்ற தகவல் வெளியானது. ஆனால் இருவருமே தற்போதைக்கு அதிகாரப்பூர்வமாக இணைய வேண்டாம், சில நாட்கள் கழித்து அதை பற்றி பேசிக் கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டார்களாம்.