தீபிகா படுகோன் திடீர் கர்ப்பம்… அட்லீக்கு நடந்த உச்சகட்ட அவமானம்.. படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

பிற படங்களை காப்பியடித்து படம் எடுக்கின்றார் என்கின்ற விமர்சனம் இயக்குனர் அட்லீ மீது இருந்தாலும், தொடர்ந்து நடிகர் விஜயின் மனதில் இடம் பிடித்த முக்கிய இயக்குனர்களில், முதல் இயக்குனராக தற்பொழுது இருந்து வருகிறார். தன்னை சரியாக பயன் பயன்படுத்துவதில் அட்லி மிகத் திறமையானவர் என்கின்ற நம்பிக்கை அட்லி மீது நடிகர் விஜய்க்கு உண்டு.

அதனால் தான் மீண்டும் மீண்டும் அட்லீக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கி வருகிறார் விஜய். இந்த நிலையில் தற்பொழுது வாரிசு படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதை முடித்துவிட்டு மீண்டும் அட்லியுடன் கூட்டணி சேர்கிறார்.

இந்த நிலையில் அட்லீ தற்போது நடிகர் சாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார், இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி, மற்றும் நடிகைகள் நயன்தாரா, தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்கின்றனர். முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

பொதுவாக ஒரு படத்தில் காமெடி காட்சிகள் படமாக்கப்படும் போது அந்த காட்சிகள் சிறப்பாக இருந்தால், அங்கே இருக்கும் பட குழுவினர் சிரித்து விடுவார்கள். அதே போன்று சோகக் காட்சிகளில் படமாக்கப்படும் போது, சுற்றி இருக்கிற படக்குழுவினர் மிகுந்த சோகத்தில் மூழ்கி விடுவார்கள். இந்த நிலையில் தற்பொழுது அட்லி இயக்கும் ஜவான் படத்தில் தீபிகா படுகோன் நடிக்கும் காட்சி ஒன்று சென்னையில் படமாக்கப்பட்டு வந்துள்ளது.

இதில் தீபிகாபடுகோன் தூக்கு தண்டனை கைதியாக நடிக்கிறார். இதற்காக தூக்கு மேடை, சிறைச்சாலை செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்கிறது. தீபிகா படுகோனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக , அவர் இருக்கும் சிறை அறையில் இருந்து வெளியே சிறை காவலர்களால் அழைத்து வரப்படுகிறார். சோகத்துடன் தீபிகா படுகோன் தூக்கு மேடையை நோக்கி வருகிறார்.

தீபிகா படுகோன் தூக்குமேடையில் நிற்க வைத்து, தூக்கு தண்டனை கைதிக்கு சட்டப்படி தூக்கிலிடப்படும் முன் செய்யவேண்டிய நடைமுறைகள் செய்யப்படுகிறது. பின்பு கருப்பு துணியால் தீபிகா படுகோன் முகம் மூடப்படுகிறது. தூக்கு கயிறை இழுப்பதற்கு முன்பு தீபிகா படுகோன் தூக்கு மேடையில் மயங்கி விழுந்து விடுகிறார்.

உடனே அங்கே மருத்துவர் வந்து தீபிகா படுகோனை பரிசோதித்து பார்த்ததில், இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்கிற தகவலை தெரிவிக்கிறார். அப்படி தெரிவிக்கும் போது, அங்கே சுற்றி இருந்த பட குழுவினர் கேலி கிண்டல் செய்து சிரித்துள்ளனர். எதற்காக சிரிக்கிறீர்கள் என அட்லீ கோபப்பட்டு சைலென்ஸ் என சத்தமிட்டுள்ளார்.

இந்த நிலையில் அங்கே இருந்த பட குழுவினர்கள், ஒருவருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முதல் நாளே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து முடித்திருக்க வேண்டும் என்பது சட்ட விதி, அப்படி இருக்கையில் முதல் நாள் பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரியாமல், தூக்கு மேடை வந்தவுடன் அவர் மயங்கி விழுவதும், பின்பு அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று மருத்துவர் சொல்வதும் ஏற்று கொள்ள முடியாது.

இது போன்ற காட்சி, ஜவான் படத்தில் இடம் பெற்றால், படத்தை பார்ப்பவர்கள் கேலி கிண்டல் செய்து சிரித்து விடுவார்கள் என்று அங்கிருந்த படக்குழுவினர் முணுமுணுப்பது அட்லி காதில் விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த காட்சியில் சில மாற்றங்கள் கொண்டு அட்லீ வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு பெண் தூக்கு தண்டனை கைதி தூக்கு மேடைக்கு அழைத்து சென்று தூக்கிடும் முன் மயங்கி விழுந்து, அவர் கர்ப்பமாக இருக்கிறார் என மருத்துவர் சொல்லும் காட்சி இதற்கு முன்பு ஆங்கில படத்தில் இடம்பெற்றுள்ளது, அதில் இருந்து அட்லீ காப்பியடித்துள்ளார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.