சூர்யா எடுத்த அதிரடி… முடிவுக்கு வருகிறது பாலாவின் சினிமா வாழ்க்கை.. இருவருக்கும் என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

சூர்யா- பாலா கூட்டணியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து பாதியிலே நிற்கும் படம் வணங்கான். கடந்த சில வருடங்களாக சினிமாவில் தொடர் தோல்வியை சந்தித்து வரும் இயக்குனர் பாலா, மேலும் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார். இப்படி குடும்பத்திலும் சினிமாவிலும் ஒரே நேரத்தில் தோல்வியை தழுவி மிக பெரிய சோகத்தில் நின்று கொண்டிருந்தார் பாலா.

இந்த நிலையில் பாலாவுக்கு மீண்டும் சினிமாவில் மறுவாழ்வு கொடுக்கும் விதத்தில் அவருடைய இயக்கத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய சொந்த தயாரிப்பில் படம் நடிக்க ஓகே சொன்னார். இதனை தொடர்ந்து சூர்யா – பாலா கூட்டணியில் வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் விறுவிறுப்பாக தொடங்கியது.

பாலாவின் குணம் அறிந்து பலர், பாலாவின் படத்தில் நடிக்க தயங்கினார்கள். இருந்தும் பாலா தன்னை சினிமாவுக்கு அடையாளம் காட்டியவர் என்கின்ற ஒரு காரணத்திற்காக, கஷ்டத்தில் இருக்கும் பாலாவுக்கு மறுவாழ்வு கொடுக்கும் விதத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க முன் வந்துள்ளார். மேலும் பாலா நடவடிக்கைகளில் மாற்றம் வந்திருக்கும் என்கிற நம்பிக்கையும் சூர்யாவுக்கு இருந்துள்ளது.

ஆனால் பாலா நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. மேலும் படத்தின் கதையில் ஒரு தெளிவு இல்லாமல், அந்த கதையை அடுத்தகட்டது நகர்த்த முடியமால், அடுத்து என்ன காட்சிகளை எடுக்க வேண்டும் என்கிற குழப்பத்தில், வணங்கான் படத்தின் படப்பிடிப்பில் ஒரே காட்சிகளை தொடர்ந்து மூன்று நாட்கள் படமாக்கி வந்துள்ளார் பாலா. இதுபோன்ற செயல்களால் பாலா-சூர்யா இடையே தொடர்ந்து சிறு சிறு மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இருந்தும் பாலாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, இந்த படத்தை முடித்து கொடுத்து விட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தொடர்ந்து பல விஷயங்களில் சகித்துக் கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்துள்ளார் சூர்யா. ஒரு கட்டத்தில் பாலாவின் டார்ச்சர் தாங்க முடியாத சூர்யா, படப்பிடிப்பிலிருந்து பாதியில் வெளியேறி சென்னை சென்றுள்ளார். இதனால் வணங்கான் படம் பாதியிலே நின்றது.

மீண்டும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பை தொடங்க, சூர்யா-பாலா இருவருக்கும் இடையில் சமரச பேச்சு வார்த்தைகள் நடந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்கான வேலையை தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வணங்கான் படத்தின் கதையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முடியாமல் இருக்கிறார். சூர்யாவும் சில நாட்கள் பொறுமையாக இருந்தவர், பாலாவின் தாமதத்தை புரிந்து கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என ஏற்கனவே கமிட்டாகி இருந்த சிறுத்தை சிவா படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தற்போது வணங்கான் படத்தின் கதையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முடியாமல் இருந்து வருகிறார் பாலா. இதனால், இனி இந்த படம் நகர்வது சந்தேகம் என்பதால், வணங்கான் படத்தில் பணியாற்றியவர்கள் பலர் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கின்ற நோக்கத்தில், வணங்கான் படத்தில் இருந்து வெளியேறி, வெவ்வேறு படத்தில் கமிட்டாகி பிசியாக இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து வணங்கான் படம் கதை விவாரத்தில் பாலா குழம்பி போய் உள்ளதால், இதுவரை எடுத்த முதல் கட்ட படப்பிடிப்பிலும் பல காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட வேண்டும், அதன் பின்பு தான் இந்த கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும் என்கின்ற தகவலை சூர்யாவுக்கு சொல்லி அனுப்பி உள்ளார் பாலா. இதற்கு தயாரிப்பாளர் சூர்யா மீண்டும் முதலில் இருந்து படப்பிடிப்பு நடத்துவதற்கு வாய்ப்பில்லை.

இதுவரை 30 நாட்களுக்கு மேல் முதல் கட்ட படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது, அடுத்தகட்டத்துக்கு மேலும் 30 நாட்களுக்குள் இந்த படத்தை எடுத்து முடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வணங்கான் படத்தை கைவிட்டு விடலாம் என்கின்ற தன்னுடைய முடிவை முடிவில் சூர்யா உறுதியாக இருப்பதால் வணங்கான் படம் பாதியிலேயே கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.சூர்யாவின் இந்த முடிவால் பாலாவின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.