ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்… அடம் பிடிக்கும் ரஜினிகாந்த் … டென்ஷனில் தயாரிப்பு நிறுவனம் என்ன செய்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்தே. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இருந்திருந்தாலும், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. மேலும் இந்த படம் கொரோனா தொற்றின் காரணமாக ரஜினிகாந்த் உடல் நிலையை கருத்தில் கொண்டு படப்பிடிப்பு நடத்துவதில் தாமதம் ஆனது, எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் கடைசி நேரத்தில் நடத்த படப்பிடிப்பு காரணமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர் க்கு அதிக செலவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வதற்காக அடுத்த ஒரு படம் நடிக்க அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு தன்னுடைய சம்பளத்தில் 20 கோடி ரூபாய் குறைத்து கொண்டு கால் சீட் கொடுத்தார் ரஜினிகாந்த், இந்த படத்துக்கான இயக்குனரை தேர்வு செய்யும் பொறுப்பை ரஜினிகாந்த்க்கு தயாரிப்பு நிறுவனம் வழங்கியதை தொடர்ந்து, பல இயக்குனரிடம் கதை கேட்ட ரஜினிகாந்த், இறுதியாக இயக்குனர் நெல்சனை தேர்வு செய்தார்.

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கான அடுத்தகட்ட வேலைகளில் ஈடுபட்ட இயக்குனர் நெல்சனை அழைத்து, தனக்கு ஜோடியாக தற்பொழுது தமிழில் உள்ள இளம் நடிகைகள் வேண்டாம், தன்னுடன் எந்திரன் படத்தில் ஜோடியாக நடித்த ஐஸ்வர்யாராய் புதிய படத்தில் நடிக்க இயக்குனரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தயாரிப்பு நிறுவனம் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து செம்ம டென்ஷனான தயாரிப்பு நிறுவனம்.

இந்த படத்தில் குறைந்த சம்பளம் வாங்கும் நடிகையை நடிக்க வைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, இதற்கு, சார் ஐஸ்வர்யா ராய் நடிக்க விருப்ப படுகிறார் என தெரிவிக்க, அதிக சம்பளம் கொடுத்து சார் ஆசை பாடுவதற்காக நடிக்க வைக்க முடியாது என தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதன் பின்பு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் மாற்றம் செய்யப்படலாம் என்கிற பேச்சும் அடிபட்டது.

ஆனால் கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்து இயக்குனர் நெல்சன் புதிய படத்தின் இயக்குனராக தொடர்வது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்க நிலையில், படத்தின் படப்பிடிப்புக்கான செட் அமைக்கும் பனி ஆந்திராவில் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது, மறுபக்கம் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நடிகை மற்றும் மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதில் மீண்டும் இயக்குனர் நெல்சனை அழைத்து, இந்த படத்தில் தன்னுடைய பாத்திரம் 50 வயதான பத்திரமாக இருப்பதால் தனக்கு ஜோடியாக இளம் நடிகைகளை நடிக்க வைத்தால் சரி இருக்காது, அதனால தனக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க வேண்டும், அப்படி அவர் நடிக்கும் பட்சத்தில் ஹிந்தியிலும் படம் வியாபாரம் அதிகமாகும் என ரஜினிகாந்த் தெரிவிக்க, இந்த தகவல் தயாரிப்பு நிறுவனம் கவனத்துக்கு சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் தொந்தரவு காரணமாக அதிக சம்பளம் கொடுத்து ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனம் ஓகே சொல்லியிருக்கிறது. மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் வில்லன் பாத்திரத்தில் கர்நாடக நடிகர் சிவராஜ் நடிக்க இருக்கிறார், மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடம் பிடித்து ஐஸ்வர்யா ராய் உடன் ஜோடி சேர்ந்துள்ளார் ரஜினிகாந்த் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

மனைவியுடன் வந்து அசிங்கப்பட்ட அட்லீ…! இதெல்லாம் ஒரு பொழப்பா காரி துப்பிய சினிமா வட்டாரம்..