அமெரிக்காவே வியந்து பார்க்கும் நடிகர் நெப்போலியன்…சத்தமே இல்லமால் அவர் செய்த சாதனை என்ன தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் ‘புது நெல்லு புது நாத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் நெப்போலியன். 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, தொழில் அதிபர் என பல முகங்களை கொண்ட நெப்போலியன் 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ் மற்றும் குனால் என்ற மகன்களும் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளதால்,

கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி அதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நெப்போலியன் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் தொழில் தொடங்க திட்டமிட்ட நெப்போலியன், தனது மகன் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கும் சூழல் ஏற்படவும் தனது தொழிலை அமெரிக்காவில் தொடங்கினர். தற்போது அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியனுக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் சுமார் 1500 பேர் வரை வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

பல முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் இந்த நிறுவனத்தில் பனி புரிய தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் நெப்போலியன், சினிமா துறையில் இருந்து தொழிலதிபராக தங்கள் வாழ்க்கையை மாற்றி கொண்டவர்களில். நடிகர் அரவிந்த்சாமி போன்றவர்கள் சொன்றாலும் பின் தொழில் வீழ்ச்சி காரணமாக மீண்டும் சினிமாவுக்கு வந்தனர்,ஆனால் நடிகர் நெப்போலியன் மிக பெரியவெற்றியை தொழில் துறையில் பெற்று தொழில் அதிபராக வலம் வருகிறார்,

இந்நிலையில் ஐடி தொழிலில் சாதித்து அமெரிக்காவில் செட்டிலான நெபோலியன், அங்கே சொந்தமாக இடம் ஒன்றை வாங்கி, விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது, சமீபத்தில் தன்னுடைய விவசாய நிலத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்ட நெபோலியன், அமெரிக்க ஸ்டைலில் விவசாயி போன்று காட்சியளித்தார், ஐடி துறையில் சாதித்தது போன்று தன்னுடைய விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தி, அதிலும் பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த நெப்போலியன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மூத்த மகனான தனுஷ் நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் உள்ளார். அதனால் இதை போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு திருநெல்வேலி அருகே மருந்துவமனை ஒன்று வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் நடிகர் நெப்போலியன். பல வருடங்களாக இவர் நடத்திவரும் மருத்துவமனைக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஏனென்றால் தன் மகனைப் போல் யாரும் இருந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த மருத்துவமனையை அவர் நடத்தி வருகிறார்.

தமிழர்கள் வயிற்றில் அடிக்கும் ரஜினிகாந்த்.. கொந்தளிக்கும் சினிமா துறையினர்.. என்ன செய்தார் ரஜினி தெரியுமா.?