கோவை சரளா நடிப்பில் அசுரன், நடிப்பு ராட்சசி .. கமல்ஹாசன் புகழாரம்… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : கவுண்டமணி முதல் கமலஹாசன் வரை ஜோடியாக நடித்த கோவை சரளாவின் அடுத்த திரைப்படமான செம்பி தமிழ் ரசிகர்களை பெரும் எதிர்ப்பரப்புக்குள்ளாகியிருக்கிறது. தனது நகைச்சுவையாலும் கொஞ்சும் கோயம்புத்தூர் தமிழாலும் தமிழகத்தையே கட்டிப்போட்டவர் கோவை சரளா. முக்கிய கதாபாத்திரங்கள் பல ஏற்று நடித்திருந்தாலும் கமலஹாசனுடன் ஜோடியாக நடித்த சதிலீலாவதி திரைப்படம் அவரின் இன்னொரு பரிமாணத்தை எடுத்துக்கூறியிருந்தது.

இதனிடையே மைனா கும்கி போன்ற யதார்த்த வாழ்வியலை கதைக்களமாக கொண்டு தமிழ்திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனரான பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவரவுள்ள செம்பி திரைப்படத்தில் கோவைசரளா முக்கிய கதாபத்திரம் ஏற்று நடித்துள்ளார். அவரே ஹீரோ அவரே ஹீரோயின் என கூறப்படுகிறது.

இந்த செம்பி திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே படக்குழுவினரை நடிகர் கமலஹாசன் திடீரென சர்ப்ரைஸாக அழைத்துள்ளார். கமலஹாசனை தயாரிப்பாளர் ரவீந்திரன், ரியா, இயக்குனர் பிரபு சாலமன், கோவைசரளா, நடிகர் அஸ்வின் குமார உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது நடிகர் கமலஹாசன் கோவை சரளா நடிப்பில் ஒரு அசுரன்.அவர் ஒரு நடிப்பு ராட்சசி என கூறியுள்ளார். மேலும் படக்குழுவினரை மனதார பாராட்டியுள்ளார். இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இந்த திரைப்படம் மலையடிவாரத்தில் வாழும் ஒரு பாட்டி மற்றும் பேத்தியின் பேசப்போராட்டங்களை எடுத்துக்கூறும் கதையாகவும் அதேநேரத்தில் திரில்லராகவும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் கருத்து தெரிவிக்கின்றனர்.