விஷால் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்… விஜய் படத்தில் இருந்து வெளியேற்ற இது தான் காரணம்..

0
Follow on Google News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் படம் லீ. இந்த படத்தின் முதல் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற முடிந்த நிலையில், தற்பொழுது காஷ்மீரில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவதற்காக விஜய், த்ரிஷா மற்றும் பட குழுவினர் அங்கே சென்றுள்ளார், லீ படத்தில் ஏழு வில்லன்கள் நடிக்கிறார்கள்.

இதில் நடிகர் அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் போன்ற பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். அதில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் விஷாலை தேர்வு செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஷாலை நேரில் சந்தித்து படத்தின் கதையை தெரிவித்து கமிட் செய்து விட்டார்.

ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் விஷால் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகுத்து வருகிறார், விஷள பற்றி நன்கு அறிந்தவர், அதனால் விஷால் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வருவதில்லை. மேலும் தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை, இயக்குனருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் அடைந்து உள்ளார்கள்.

அந்த வகையில் விசாலை பற்றி நன்கு அறிந்தவர் தயாரிப்பாளர் லலித் என்பதால் லோகேஷ் கனகராஜிடம் நடிகர் விஷால் இந்த படத்திற்கு சரிப்பட்டு வர மாட்டார்,வேறு ஒரு நடிகரை வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டாராம்