வெங்கட் பிரபுவா.. வேண்டவே வேண்டாம் .. அஜித் கோபத்திற்கு என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மங்காத்தா படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்ற வெங்கட் பிரபு, அஜித்துக்கு பிடித்தமான இயக்குனரானார். பொதுவாக தனக்கு பிடித்த இயக்குனருடன் அடுத்தடுத்து தொடர்ந்து அதே இயக்குனர் படத்தில் நடிப்பார் அஜித். ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இது குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு தந்தை கங்கை அமரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் வெங்கட் பிரபு தெலுங்கு படம் ஒன்றை இயக்க இருக்கிறார், அதன் பின்பு விஜய் மற்றும் அஜித் இருவரையும் வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் பேன் இந்தியா படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக கங்கை அமரன் தெரிவித்தார்.

இந்த தகவல் தமிழ் சினிமாவில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உண்மையில் அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து படம் நடிக்க இருப்பதாக கங்கை அமரன் தெரிவித்ததில் உண்மை இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய மீடியா பப்ளிசிட்டிக்காக போகிற போக்கில் அடித்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால் இது மிக பெரிய விவாத பொருளாக மாறி நடிகர் அஜித்தை தர்ம சங்கடத்தில் அப்போது ஆழ்த்தி வெங்கட் பிரபு மீது கோபத்தை ஏற்படுத்தி விட்டது.

மேலும் மங்காத்தா 2 படத்தை விரைவில் எடுக்க இருப்பதாகவும், அதில் அஜித் நடிக்க இருப்பதாகவும் வெங்கட் பிரபு பொது இடங்களில் லூஸ் டாக் விட்டுள்ளார், இந்த தகவல் அஜித் கவனத்துக்கு சென்றுள்ளது, பொதுவாக அதிகார பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடும் வரை, இயக்குனர்கள் எந்த ஒரு தகவலும் வெளியில் சொல்ல கூடாது என்பதை தான் அஜித் விரும்புவார்.

ஆனால் வெங்கட் பிரபுவின் நடவடிக்கை அஜித்துக்கு வெறுப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை தூக்கிவிட்டு வேறு ஒரு இயக்குனரை தேர்வு செய்யும் பனி நடந்த போது, வெங்கட் பிரபுவும் அந்த லிஸ்ட்ல் இருந்துள்ளார்,லைக்கா நிறுவனத்தில் மனேஜர்களில் ஒருவர் சுப்பு என்பவர் வெங்கட் பிரபுவை சிபாரிசு செய்ய, அதற்கு அஜித் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.