அதிகபசங்கி தனம் செய்த சரத்குமார்… டென்சனின் விஜய் என்ன செய்தார் தெரியுமா.? படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு..

0
Follow on Google News

விஜயின் அனுமதி இல்லாமல் அதிகபசங்கித்தனமாக சரத்குமார் செய்த ஒரு செயலால் விஜய்க்கு மிகப்பெரிய தர்ம சங்கடம் ஏற்பட்ட ஒரு சம்பவம் தற்பொழுது வெளியாகி உள்ளது. விஜயிடம் கால்ஷீட் கேட்டு பல நாட்களாக காத்திருந்து வருகிறார் ஆர் பி சவுத்ரி, இதற்காக நடிகர் விஜய் பலமுறை ஆர் பி சவுத்ரியை சந்தித்து கால்ஷீட் கேட்டபோதெல்லாம், அதற்கு விஜய் உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்காமல் பண்ணலாம் சார் பார்க்கலாம் என்று இழுத்துக் கொண்டே சென்றுள்ளார்.

இந்த நிலையில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த போது, நடிகர் விஜய் மற்றும் சரத்குமார் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆர் பி சவுத்ரி மற்றும் சரத்குமார் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசும் நட்பு கொண்டவர்கள். அப்போது ஆர் பி சவுத்ரி நடிகர் சரத்குமாரிடம் எதார்த்தமாக தொலைபேசியில் பேசிய போது, நான் விஜயிடம் நீண்ட நாட்களாக கால்சீட் கேட்டு வருகிறேன்.

அவர் எந்த பதிலும் சொல்லாமல் இழுத்தடித்து வருகிறார் என தெரிவிக்க. அதற்கு அதற்கு சரத்குமார் தற்பொழுது விஜய் என்னுடன் தான் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கிறார். நீங்கள் உடனே கிளம்பி ஹைட்ரபாத் வாங்க இங்க வைத்து நான் பேசி உங்களுக்கு கால் சீட் தருகிறேன் என்றதும், உடனே ஆர் பி சவுத்ரியை சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கு வரவைத்துள்ளார் நடிகர் சரத்குமார்.

ஆனால் ஆர்பி சவுத்ரி வரும் தகவலை முறையாக நடிகர் விஜய்க்கு தெரிவிக்கவில்லை சரத்குமார்.இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த ஆர் பி சவுத்ரியை நேரடியாக விஜையிடம் அழைத்துச் சென்றுள்ளார் சரத்குமார். அப்போது சற்றும் ஆர்வி சவுத்ரி வருவதை எதிர்பார்க்காத நடிகர் விஜய் ஷாக் ஆகி வாங்க என்ன விஷயம் என கேட்க,

அதற்கு சரத்குமார் நான் தான் வர சொன்னேன், உங்களிடம் கால்ஷீட் கேட்டிருந்தாராம் அதைப்பற்றி பேச தான் வரச் சொல்லி இருந்தேன் என சரத்குமார் பேச, என்ன சொல்வதென்றே தெரியாமல் தர்ம சங்கடத்தில் அங்கே இருந்த விஜய், வழக்கம் போல் பார்க்கலாம் சார், நல்ல செய்தியா சொல்றேன் என ஆர் பி சவுத்ரியை பேசி அனுப்பி வைத்துள்ளார்,

இந்த நிலையில் ஏற்கனவே போக்கிரி படப்பிடிப்பு தளத்தில் நெப்போலியன் மற்றும் விஜய் இருவருக்கும் இடையில் சில காரணங்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மீடியா மத்தியில் விஜய்க்கு அவப்பெயரை ஏற்படுத்தி தந்தது, அந்த வகையில் சரத்குமார் மீது தன்னிடம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இப்படி ஆர்.பி சவுத்ரி அழைத்து வந்தது குறித்து சரத்குமார் மீது விஜய்க்கு கடும் கோபம் இருந்தாலும் தன்னுடைய டென்ஷனை வெளிக்காட்டாமல் அமைதியாக கடந்து சென்று விட்டாராம் நடிகர் விஜய்.